நாடெங்கும் தீபாவளி பண்டிகை...

Published By: Nanthini

24 Oct, 2022 | 01:28 PM
image

நாடளாவிய ரீதியில் இன்றையதினம் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மக்கள் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் இம்முறை தீபாவளிப் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

நீர்கொழும்பில் விசேட பூசைகள் 

நீர்கொழும்பில் இந்து மக்கள் தீபாவளி தினத்தை  இன்று (ஒக் 24) அமைதியான முறையில் கொண்டாடுகின்றனர்.

நீர்கொழும்பு நகரில் உள்ள கோவில்களில் காலை வேளையில் விசேட பூஜைகள் இடம்பெற்றன.

இதேவேளை கடற்கரை தெரு சித்தி விநாயகர் ஆலயத்தில் கிருபாகர சிவாச்சாரியார் குருக்கள் தலைமையில் விசேட பூஜையொன்றும் நடைபெற்றது. இதில் அதிகளவு பக்தர்கள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது. 

நல்லூர் கந்தசுவாமி கோவிலில் விசேட பூஜை

தீபாவளி தினத்தினை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை (ஒக் 24) நல்லூர் கந்தசுவாமி கோவிலில் விசேட பூஜை வழிபாடுகள்  நடைபெற்றன.

(படங்கள்: ஐ. சிவசாந்தன்) 

யாழில் மழையால் சோபையிழந்த தீபாவளி 

யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் கடும் மழை பொழிந்தமையால், தீபாவளி கொண்டாட்டங்கள் சோபையிழந்து காணப்படுகிறது. 

பொருளாதார நெருக்கடிகள் காரணமாக இம்முறை மக்கள் புத்தாடைகள் வாங்குவது, பட்டாசுகள் வாங்குவது என்பவற்றில் நாட்டம் இல்லாத நிலைமை காணப்படுகிறது. 

இந்நிலையில் இன்றைய தினம் முற்பகல் முதல் கடும் மழை பெய்வதால், தீபாவளி கொண்டாட்டங்கள் சோபையிழந்தன. 

அத்துடன் பெரும்பாலானவர்கள் ஆலய வழிபாடுகளுடன் தமது கொண்டாட்டங்களை மட்டுப்படுத்திக்கொண்டுள்ளனர். 

(படங்கள்: ஐ.சிவசாந்தன்) 

வண்ணையம்பதி வரதராஜப் பெருமாள் ஆலயம் 

தீபாவளியை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க வண்ணையம்பதி ஸ்ரீ வேங்கட வரதராஜப் பெருமாள் தேவஸ்தானத்தில் விசேட ஆராதனைகள் காலை 6 மணிக்கு இடம்பெற்றன. 

இந்த பூஜை வழிபாட்டினை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ செ.ரமணிதர குருக்கள் நடாத்தி வைத்தார்.

இதன்போது பக்தர்கள் தம் உள்ளத்தில் உள்ள இருளை அகற்றி தீபவொளி என்னும் திருவிளக்கேற்றி வழிபட்டுச் சென்றனர்.

ஹட்டன் அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்

(க.கிஷாந்தன்)

ட்டனில் அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் ஸ்ரீ பூர்ணசந்திரானந்த குருக்கள் தலைமையில் தீபாவளி விசேட சமய வழிபாடுகள் நடைபெற்றன.

இவ்வழிபாட்டில் ஆலய பரிபாலன சபையினர் உட்பட பொது மக்களும் ஈடுபட்டிருந்தனர். அத்தோடு மலையகத்தில் பல ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்து மக்கள் தீபாவளி பண்டிகையை புத்தாடைகள் அணிந்து, சமய வழிபாடுகளில் ஈடுபட்டு, உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டாடி வருகின்றனர்.

திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம் 

(சேனையூர் நிருபர்)

திருகோணமலையில் வரலாற்று சிறப்புமிக்க அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்திலும், ஏனைய ஆலயங்களிலும் தீபாவளி திருநாளை முன்னிட்டு இன்று (24) விசேட கிரியைகள், பூசை நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாட்டில் ஈடுபட்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கண் பார்வையோடு தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிக்கும்...

2025-02-18 17:31:20
news-image

சுழிபுரம் மேற்கு கலைமகள் அறநெறி பாடசாலை...

2025-02-18 13:02:36
news-image

அவிசாவளை சாயி பாபா ஆலய நூதன...

2025-02-18 12:53:21
news-image

யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரி மெய்வல்லுநர் போட்டி...

2025-02-17 17:21:25
news-image

கரிஷ்மா கந்தகுமாரின் கர்நாடக இசை அரங்கேற்றம்

2025-02-17 16:52:16
news-image

திருகோணமலையில் "பெண்கள் அரசியலில்" எனும் தலைப்பில்...

2025-02-17 17:34:07
news-image

மாற்றுத்திறனாளிகளுடன் பகிர்வோம் மகிழ்வோம் நிகழ்ச்சி

2025-02-17 17:33:29
news-image

புகழ் பூத்த எழுத்தாளரான பாலமனோகரனின் "மிஸ்டர்...

2025-02-16 17:06:44
news-image

இயக்கச்சி பிரான்சிஸ் சவேரியார் ஆலயம் யாழ்....

2025-02-16 16:53:04
news-image

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் 175...

2025-02-15 13:58:01
news-image

நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொதுக்கூட்டம்...

2025-02-15 13:49:53
news-image

யாழில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள...

2025-02-15 13:29:22