22 நிறைவேற்றப்பட்டமை அரசாங்கத்திற்கு பாரியதொரு சவாலாகும் - திஸ்ஸ அத்தநாயக்க

Published By: Vishnu

23 Oct, 2022 | 08:28 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை இரண்டரை வருடங்களுக்கு நீடித்தல், இரட்டைக் குடியுரிமையை நீக்குதல் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவுதல் ஆகிய மூன்று முக்கிய காரணங்களுக்காக ஐக்கிய மக்கள் சக்தி 22வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவளித்ததது.

மேலும் பாராளுமன்றத்தில் 22வது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டமை அரசாங்கத்திற்கு சவாலானது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (23) ஐக்கிய மக்கள் சக்தியின் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் சதஹம் யாத்திரை நிகழ்ச்சித்திட்டத்தை நாவலப்பிட்டியில் ஆரம்பித்து வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

எதிர்கட்சி 22 ஆவது திருத்தத்திற்கு ஆதரவு வழங்கியமைக்கு பிரதான காரணம் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினை விட தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள திருத்தம் ஓரளவு ஏற்றுக்கொள்ள கூடியதாக உள்ளது.

மேலும் 22 ஆவது திருத்தத்தில் குறிப்பாக சில முக்கிய  விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன அதில் 

பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை இரண்டரை வருடங்களுக்கு நீடித்தல் இரட்டைக் குடியுரிமையை நீக்குதல் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவுதல் ஆகிய மூன்று முக்கிய காரணங்களுக்காக ஐக்கிய மக்கள் சக்தி 22வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவளித்ததது

மேலும் எதிர்க்கட்சியில் இரட்டைக் குடியுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இல்லை. நாடாளுமன்றத்தில் இரட்டைக் குடியுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்  இருப்பின் அவர்களை தொடர்ந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்காக இந்த நாட்டில் கஞ்சா பயிரிடுவதை சட்டப்பூர்வமாக்குவது  நாட்டின் கலாசாரத்துக்குச் சிறிதும் பொருந்தாது. நாட்டை வலுப்படுத்தும் நோக்கில் கஞ்சா செய்கையை சட்டப்பூர்வமாக்குவதில் ஐக்கிய மக்கள் சக்திக்கு உடன்பாடு இல்லை.

பணம் சம்பாதிப்பதற்காகவும், அரசின் வருமானத்தை அதிகரிப்பதற்காகவும் நாட்டின் கலாச்சாரத்தை சீரழிக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்;...

2025-02-14 23:07:15
news-image

எமது பேச்சுவார்த்தைகள் ஒரு கட்சியுடன் வரையறுக்கப்பட்டவையல்ல...

2025-02-14 15:44:00
news-image

யு.எஸ்.எய்ட்டின் இலங்கைக்கான நிதியுதவி விவகாரம் தொடர்பில்...

2025-02-14 15:24:54
news-image

உள்ளூராட்சி மன்ற சட்டமூலம் தொடர்பில் சட்டமா...

2025-02-14 13:06:40
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு இராணுவ அதிகாரிகள்...

2025-02-14 20:36:10
news-image

ரணில் - மைத்திரி தலைமையில் எதிர்கால...

2025-02-14 15:55:25
news-image

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த...

2025-02-14 19:51:16
news-image

மாலம்பேயில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...

2025-02-14 19:07:56
news-image

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் சபைக்கு அறிவிக்கும்...

2025-02-14 14:14:28
news-image

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள்...

2025-02-14 19:06:18
news-image

வற் வரியை நீக்குமாறும் மீன்பிடியை ஊக்குவிக்குமாறும்...

2025-02-14 17:29:15
news-image

இணையத்தளம் மூலம் 29 இலட்சம் ரூபா...

2025-02-14 19:03:13