(இராஜதுரை ஹஷான்)
மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 26 பேரும்,13 எதிர்க்கட்சி உறுப்பினர்களும்,5 சுயாதின உறுப்பினர்களும் கலந்து கொள்ளவில்லை.
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. சட்டமூலத்துக்கு ஆதரவாக 179 வாக்குகளும்,எதிராக ஒரு வாக்கும் பதிவு செய்யப்பட்டன.
சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது ஐக்கிய மக்கள் சக்தி,ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி,மேலவை இலங்கை கூட்டணி,சுதந்திர மக்கள் காங்சிரஸ் ஆகிய கட்சிகள் மற்றும் கூட்டணிகளின் உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தார்கள்.
மக்கள் விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களான அநுரகுமார திஸாநாயக்க,விஜித ஹேரத் மற்றும் ஹரினி அமரசூரிய ஆகிய மூவரும் 22ஆவது சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தார்கள்.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணதுங்க,மஹிந்த அமரவீர,பிரமித்த பண்டார தென்னகோன்,சனத் நிஷாந்த,சிறிபால கம்லத்,அனுராத ஜயரத்ன,சீதா அரம்பேபொல,ஜோன்ஷ்டன் பெர்னான்டோ,பவித்ரா வன்னியராட்சி,காமினி லொகுகே,ஜனக பண்டார தென்னகோண்,நிபுண ரவனக,
எஸ்.எம்.சந்திரசேன,ரோஹித அபேகுவர்தண,விமலவீர திஸாநாயக்க,தம்மிக பெரேரா,எம்.எம்.முஸாரப்,ஜயந்த கெடகொட,சாகர காரியவசம்,ரஞ்சித் பண்டார ஆகியோர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் ஜி.எல்.பீரிஸ்,உபுல் கலபதி,அங்கஜன் இராமநாதன்,சான் விஜயலால் சில்வா மற்றும் திஸ்ஸ விதாரன ஆகியோர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களான ஆர்.சம்பந்தன்,அப்துல் ஹலீம்,வடிவேல் சுரேஷ்,வினோ நோக இராதலிங்கன்,கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன்,ஹெக்டர் அப்புஹாமி,வேலுகுமார்,ஹேஷா விதானகே.எம்.ஏ.சுமந்திரன்,சாணக்கியன்,நவராஜா கலையரசன் ஆகியோர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM