(எம்.எப்.எம்.பஸீர்)
பொலிஸ் பொறுப்பதிகாரிகளாக செயற்பட்ட 14 பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த மே மாதம் 9 ஆம் திகதியும் அதனை அண்மித்தும் நாட்டில் பதிவான வன்முறைகளின் போது, அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவங்களை தடுக்கத் தவறியதாக கூறி, தாம் இடமாற்றப்பட்டதை சவாலுக்கு உட்படுத்தி அவர்கள் இவ்வாறு மனு தாக்கல்ச் செய்துள்ளனர்.
பொலிஸ் மா அதிபர், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலர், பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர், சட்ட மா அதிபர் உள்ளிட்டோர் இம்மனுக்களில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
கடந்த மே மாதம் 9 ஆம் திகதியும் அதனை அண்மித்தும் நாட்டில் பதிவான வன்முறைகளின் போது, அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவங்களை தடுக்கத் தவறியமையை மையப்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மட்டும் இடமாற்றம் வழங்கியுள்ளதாகவும், அது அரசியல் நோக்கத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர்களான பொலிஸ் பொறுப்பதிகாரிகள் மனுக்களில் குறிப்பிட்டுள்ளனர்.
23 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் கடந்த மாதம் 20 ஆம் திகதி இடமாற்றம் செய்யப்பட்டர்.
அவர்கள் பொலிஸ் பொறுப்பதிகாரி கடமையில் இருந்து நீக்கப்பட்டு வேறு சாதாரண பொலிஸ் கடமைகள் தொடர்பில் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கூறியிருந்தார். பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கு அமைய இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் இந்த 23 பொலிஸ் பொறுப்பதிகாரிகளும், கடந்த மே மாதம் 9 ஆம் திகதியும் அதனை அண்மித்தும் நாட்டில் பதிவான வன்முறைகலின் போது, அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவங்களை தடுக்கத் தவறியமையை மையப்படுத்தி இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM