(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர் வசீம்)
2023 ஆம் நிதி ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்கவினால் நவம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் நிகழ்த்தப்படவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் வெள்ளிக்கிழமை (21) நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்படி நவம்பர் 9ஆம் திகதி ஜனாதிபதி வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்த கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், அதன் பின்னர் நவம்பர் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 8 ஆம் திகதி வரையில் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் நடத்தப்பட்டு 8 ஆம் திகதி மாலை வாக்கெடுப்பை நடத்துவது தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முதலாம் வாசிப்பு கடந்த செவ்வாய்க்கிழமை சபை முதல்வரும் அமைச்சருமான சுசில் பிரேம்ஜெயந்தவினால் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM