( எஸ்.என்.நிபோஜன் )
ஆனையிறவு உப்பளத்தைத் தனியார் மயமாக்குவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக வெளியான செய்திகளை அடுத்து, உப்பளத்தின் ஊழியர்களும் தொழிலாளர்களும் அயற்பிரதேசங்களைச் சேர்ந்த மக்களும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கான ஏற்பாட்டுக் கூட்டம் இயக்கச்சியில் இடம்பெற்றுள்ளது.பரந்தன், குமரபுரம், உமையாள்புரம், தட்டுவன்கொட்டி, இயக்கச்சி, சங்கத்தார்வயல், கோயில்வயல், முகாவில், மாசார், சோறன்பற்று, பேரலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளும் தொழிலாளர்களும் ஊழியர்களும் இதில் கலந்து கொண்டனர்.அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்ட அறிவிப்பில் நட்டத்தில் இயங்கும் கூட்டுத்தாபனங்களை தனியார் மயப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, ஆனையிறவு உப்பளத்தையும் அவ்வாறு தனியார் மயப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவந்துள்ளது. இதனையடுத்தே தமது எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கு இவர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் முருகேசு, பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபையின் முன்ளாள் உறுப்பினர் அன்ரன் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு உப்பளத்தைத் தனியார் மயமாக்கப்படுவதனால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் தொழிலாளர்களுடைய உரிமைக்கான போராட்டத்தைப்பற்றியும் கருத்துரைத்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM