(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தும் வகையில் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூல வரைபு சமர்ப்பிக்கப்படவில்லை. அரசியலமைப்பு திருத்தம் என குறிப்பிட்டுக் கொண்டு ஒருசில விடயங்கள் மாத்திரமே காலம் காலமாக திருத்தப்படுகிறது என சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரகொடி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூல வரைபு மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
பாராளுமன்றம்,பாராளுமன்ற முறைமை மற்றும் அரசியல் கட்டமைப்பு ஆகியவற்றை நாட்டு மக்கள் முழுமையாக வெறுக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. நாட்டின் அபிவிருத்தி,ஜனநாயகத்தை உறுதிப்படுத்தல் மற்றும் ஊழலற்ற அரசாங்கத்தை முன்னெடுத்தல் ஆகியவற்றை இலக்காக கொண்டு நாட்டு மக்கள் தமக்கான பிரதிநிகளை தெரிவு செய்கிறார்கள்.
இரண்டாம் குடியரசு திருத்தம் இதுவரை 20 முறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை முழுமையாக இல்லாதொழிப்பதாக தேர்தல் காலங்களில் நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கப்படுகிறது.
ஆனால் அரசியலமைப்பு திருத்தம் என்ற பெயரில் ஒருசில விடயங்கள் மாத்திரம் திருத்தம் செய்யப்படுகிறது.இதுவே காலம் காலமாக இடம்பெறுகிறது,நாட்டு மக்களும் ஏமாற்றப்படுகிறார்கள்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கும்,பலவீனமான அரசாங்கத்துக்கும் எதிராக நாட்டு மக்கள் கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்னர் வீதிக்கிறங்கிய போது அரசாங்கம் 20ஆவது திருத்தத்தை நீக்கி,அரசியலமைப்பை திருத்தம் செய்ய அவதானம் செலுத்தியது.
அக்காலப்பகுதியில் பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்பட்ட தற்போதைய நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபாக்ஷ உண்மை நோக்கத்துடன் அரசியலமைப்பு திருத்தத்துக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
ஆனால் தற்போது அவரால் கூட உண்மை தன்மையுடன்,மக்கள் எதிர்பார்ப்புக்கு அமைய அரசியலமைப்பு திருத்தத்தை உருவாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பதே உண்மை.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தும் வகையில் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள 22ஆவது திருத்தச் சட்டமூல வரைபில் எவ்வித ஏற்பாடுகளும் உள்வாங்கப்படவில்லை.
அரசியலமைப்பு திருத்தம் ஊடாக எப்பிரசசினைகளுக்கு தீர்வு எட்டப்பட்டது என்பது கேள்விக்குறியானதே என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM