(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம் வசீம்)
எரிபொருள், எரிவாயு மற்றும் மின் விநியோகம் தொடர்பில் மக்கள் போராட்டம் தற்போது தணிந்துள்ளதே தவிர நிறைவு பெறவில்லை.
வெகுவிரைவில் மக்கள் போராட்டம் கலவரமாக தோற்றம் பெறும்.வலுசக்தி துறையை தனியார் மயப்படுத்துவது எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை தோற்றுவிக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) பெற்றோலிய உற்பத்தி பொருட்கள் விசேட ஏற்பாடுகள் (திருத்தம்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
திட்டமிட்ட வகையில் வலுசக்தி துறை நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.எரிபொருள் இறக்குமதி மற்றும் விநியோகத்தில் வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் இச்சட்டமூலம் இயற்றப்படுவதை கறும் புள்ளியாக குறிப்பிட வேண்டும்.
தேசிய வளங்களை பாதுகாப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆட்சிக்கு வந்தது.ஆனால் தற்போது நெருக்கடியினை முன்னிலைப்படுத்தி நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு முற்றிலும் விரோதமாக செயற்படுகிறது.
எரிபொருள்,எரிவாயு மற்றும் மின்விநியோக கட்டமைப்பு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது,ஆகவே நாட்டில் தற்போது எந்த பிரச்சனையும் இல்லை என ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் குறிப்பிடுவது அவதானிக்கத்தக்கது.மக்கள் போராட்டம் முடிவடையவில்லை.சற்று தணிவடைந்துள்ளது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
எரிபொருள் மற்றும் எரிவாயு மற்றும் மின்சார கட்டமைப்பு வழமைக்கு திரும்பவில்லை.நாட்டு மக்களின் பாவனை குறைந்துள்ளது என்பதே உண்மை எரிபொருள் பாவனை 50 சதவீதத்தினாலும்,எரிவாயுவின் பாவனை 40 சதவீதத்தினாலும் மற்றும் மின் பாவனை 20 சதவீதத்தினாலும் குறைவடைந்துள்ளது.இதனால் பொருளாதார வளர்ச்சி வீதம் 10 வீதத்தால் குறைவடைந்துள்ளது.
நாட்டு மக்கள் தமது அத்தியாவசிய தேவைகளை குறைத்துக் கொண்டு நெருக்கடிக்குள்ளாகி உள்ளார்கள்.மக்கள் போராட்டம் முடிவடையவில்லை.வெகுவிரைவில் மக்கள் போராட்டம் கலவரமாக தோற்றம் பெறும்.
நாட்டின் ஒருமாத இறக்குமதி செலவு 1900 மில்லியனாக காணப்பட்ட போது தற்போது அந்த தொகை 1600 மில்லியனாக குறைக்கப்பட்டுள்ளமு.மறுபுறம் மாதாந்தம் செலுத்தும் 600 மில்லியன் டொலர் அரசமுறை கடன் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
வங்குரோத்து நிலை அடைந்து விட்டோம்,ஆகவே பெற்றுக்கொண்ட அரசமுறை கடன்களை மீள செலுத்த முடியாது என அறிவித்துள்ளதால் எதிர்காலங்களில் எந்த நாடும்,எந்த நிதி நிறுவனமும் இலங்கைக்கு கடன் வழங்க முன்வராது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM