(எம்.வை.எம்.சியாம்)
அநூராதபுரத்தில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் தீர்வை வரி செலுத்தப்படாமல் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 25,000 சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அநூரதபுரம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட விஜயபுர பிரதேசத்தில் அநூரதபுரம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டு அநூரதபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேக நபரிடமிருந்து வெளிநாட்டில் சட்டவிரோதமான முறையில் தீர்வை வரி செலுத்தப்படாமல் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 25,000 சிகரெட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 62 வயதுடைய ஒருவர் எனவும் அவர் அநூரதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
சம்பவம் தொடர்பில் அநூரதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM