முச்சக்கரவண்டிகளுக்கு மேலதி எரிபொருள் ஒதுக்கீடு வழங்கப்படவுள்ளதாக வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் இரு வாரங்களின் பின்னர் மேலதிக ஒதுக்கீட்டை முச்சக்கரவண்டிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், சுய தொழிலில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகளுக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டுமெனவும் இந்த நடவடிக்கையில் தாமதம் ஏற்படுவதற்கான காரணத்தையும் இன்றைய சபை அமர்வின் போது வினவியுள்ளார்.
இதற்கு பதிலளித்த வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, நீண்டகாலமாக தொழில் ரீதியாக முச்சக்கரவண்டி செலுத்துபவர்களை வகைப்படுத்துவதற்கு சில நாட்கள் தேவைப்படுகிறது. கிடைக்கப்பெற்ற தகவல்களை சரிபார்த்து ஒதுக்கீட்டை அதிகரிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ள குறைந்தது இருவாரங்களாவது தேவைப்படும்.
அதன் பின்னர் அவர்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க முடியும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM