குழந்தைகளிடம் அதிகரிக்கும் பார்வை குறைபாடு

Published By: Devika

18 Oct, 2022 | 10:27 AM
image

ள்ளி செல்லும் குழந்தைகளிடையே கிட்டப்­பார்­வைக் குறைபாடு சமீபகாலமாக அதிக­ரித்து வருவதாக இந்தியா, சீனா, ஐரோப்பா போன்ற நாடு­களில் நடைபெற்ற ஆய்வுகள் தெரிவிக்­கின்றன. 

ஸ்மார்ட்போன், தொலைக்காட்சி, கணினியை பார்த்து கொண்டிருப்பதுதான் இந்த நிலைமைக்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.

பெரும்­பாலான குழந்தைகள் எந்நேரமும் ஸ்மார்ட்­போனும் கையுமாக இருக்கிறார்கள். இல்லை­யென்­­றால் கணினி, தொலைக்காட்சி முன் மணிக்­கணக்­கில் அமர்ந்திருக்கிறார்கள்.

நம் முந்தைய தலை­முறையில் குழந்தைகள், இந்த அளவுக்குக் கண்ணாடி போடவில்லை. கிட்டப்பார்வைக் குறை­பாடு ஏற்படு­வதற்கு இன்னுமொரு முக்கியக் கார­ண­­மாக ஆய்வு சுட்டிக்காட்டுவதைக் கவனிக்க வேண்­டும். 

வீட்டுக்கு வெளியில் குழந்தைகள் விளை­யாடும் போது, கண்ணின் விழித்திரையில் ‘டோபமைன்’ என்ற வேதிப்பொருளை அதிகமாக சுரக்கச் செய்­கிறது சூரிய ஒளி.

அதன்மூலம் விழிக்கோளம் நீட்சி அடைவது தடுக்கப்படுகிறது என்றும் சொல்கி­றார்கள். சூரிய ஒளியில் உள்ள விட்டமின் ‘டி’ கண்­­களை சுற்றியுள்ள தசைகளிலுள்ள திசுக்­கள் நன்றாக வேலை செய்வதற்கும், விழித்­திரை­­யில் பிம்பம் தெளிவாக விழுவதற்கும், விழிக்­கோளத்­தின் இயல்பான வளர்ச்சிக்கும் வடிவத்­துக்கும் கூட காரணமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அந்த காலத்தில் குழந்தைகள் நேரம் கிடைக்கும் போதெல்லாம், வீட்டுக்கு வெளியே­தானே விளையாடினார்கள். விடுமுறை என்றால் சொல்லவே வேண்டாம், வீட்டுக்கே வர மாட்டார்கள். அதனால் அவர்களுடைய கண் பாது­காக்கப்பட்டது. 

ஆனால், இப்போது அதற்கு நேரெதிராகச் செயல்படுவதுதான் பிரச்சினைக்கு அடிப்­படைக் காரணம். கண் பாதுகாப்பு குறித்து குழந்தை­களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த­வேண்டும்.

குழந்தைகளின் கையில் அலைபேசியைக் கொடுப்பதை கட்டுப்படுத்த வேண்டும். சமூக வலைத்­தளங்களைத் தேவைக்கு மட்டுமே பயன்­படுத்த வேண்டும். இணையம் சார்ந்த அனைத்துத் தேவை­களுக்கும் கணினியையே பயன்படுத்த வேண்டும். 

ஏற்கெனவே கிட்டப்பார்வைக் குறைபாட்டைக் கொண்டவர்களுக்குப் பவர் அதிகரிக்கும்போது, பார்வையைப் பாதிக்கும் தீவிரப் பிரச்சினைகள் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் குழந்தைகளை வீட்டுக்கு வெளியில் விளையாடச் செய்ய வேண்டும்.

இதன்மூலம் பார்வைக் குறைபாடு ஏற்படாமல் தடுக்க முடியும். ஏற்கெனவே, கிட்டப் பார்வைக்கு கண்ணாடி அணிந்திருப்பவர்களும் வீட்டுக்கு வெளியில் அதிக நேரம் விளையாடுவதன்மூலம் கண்ணாடி பவர் அதிகரிப்பது தடுக்கப்படுவதுடன், கூடுதல் பாதிப்பு ஏற்படாமலும் தடுக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெப்ப அலையை எதிர்கொள்வது எப்படி?

2025-03-17 16:49:37
news-image

நியூமோகாக்கல் தடுப்பூசியை யார் செலுத்திக் கொள்ள...

2025-03-15 16:44:59
news-image

நுரையீரல் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2025-03-14 18:48:08
news-image

நிணநீர் நுண்ணறை வீக்க பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-03-13 19:58:33
news-image

அன்கிலொக்லொஸியா எனும் நாக்கில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2025-03-12 15:11:15
news-image

டெம்போரோமாண்டிபுலர் ஜாயிண்ட் டிஸ்பங்சன் என காதில்...

2025-03-11 17:36:18
news-image

கண் புரை சத்திர சிகிச்சைக்கு பின்னரான...

2025-03-10 16:47:15
news-image

ஒலிகோஹைட்ராம்னியோஸ் எனும் பனிக்குட நீர் குறைப்பாடு...

2025-03-06 15:49:10
news-image

குளுக்கோமா நோய் : 2020 ஆம்...

2025-03-06 04:09:10
news-image

சமச்சீரற்ற இதய துடிப்பு பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும்...

2025-03-03 14:44:16
news-image

இதய பாதிப்பினை கண்டறிவதற்காக சி டி...

2025-03-01 16:56:34
news-image

புராஸ்டேட் வீக்க பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2025-02-26 17:21:25