(எம்.வை.எம்.சியாம்)
கொழும்பு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் கடந்த சனிக்கிழமை (ஒக் 15)கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் ராஜகிரிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் 42 வயதுடையவர் எனவும், அவர் மொரகஸ்முல்ல, ராஜகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது சந்தேக நபரிடமிருந்து 5 கிராம் 84 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.
மேலும், சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் கடந்த செப்டெம்பர் 28ஆம் திகதி சேதவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம், கடந்த ஜூலை மாதம் 11ஆம் திகதி மாதம்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் மற்றும் 12ஆம் திகதி கடற்கரை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹின்னிஹாமி பிரதேசத்தில் மூவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியமை போன்ற பல்வேறு குற்றச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த சந்தேக நபர் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM