கரைச்சி நிருபர்
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ் பகுதியிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக செயற்பட்டு வருகின்ற சமூக செயற்பாட்டாளருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை தொடர்ந்து அவர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தின் கிளிநொச்சி கிளையில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
கிளிநொச்சி திருவையாறு கிராமத்தைச் சேர்ந்த குமாரசாமி தர்மராசா என்பவரே சட்டவிரோத மணல் அகழ்வோரால் ஏற்பட்ட அச்சுறுத்தலுக்கு எதிராக இம் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளார்.
கடந்த 10 வருடங்களாக விவசாயிகளையும், விவசாயத்திற்கு உயிர்நாடியாக விளங்குகின்ற இரணைமடு குளத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்ற வகையில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்பட்டு வருகின்றவர்கள் தொடர்பில் அதிகாரிகள், பொலிஸார், இராணுவம், ஆகியர தரப்பினர்களுக்கு தகவல்களை வழங்கியும், ஊடகங்கள் ஊடாக தகவல்களை வெளிக்கொண்டும் வந்தும் இதுவரை சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை மாறாக சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்படுகின்றவர்கள் தொடர்ச்சியாக இச் செயற்பாட்டில் ஈடுப்பட்டு வருவதோடு, அதற்கு எதிராக செயற்படுகின்றவர்களை தாக்கியும் அச்சுறுத்தல் விடுத்தும் வருகின்றனர்.
என்னுடன் சேர்ந்து இச் செயற்பாட்டில் ஈடுப்பட்டு வந்த நெருங்கிய உறவினரான இளைஞர் ஒருவனும் இவர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளான்.
அதுமாத்திரமன்றி குழுவாக வந்து வீடுகளுக்குள் வெடிகளை கொளுத்தி போடுதல், எச்சரிக்கை விடுதல் என்பன தொடர்ந்துகொண்டு இருக்கிறது. பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டும் அவர்களது நடவடிக்கை நிறுத்தப்பட்டதாக இல்லை. எனவேதான் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM