காம்பியாவில் 66 குழந்தைகள் இறந்தமை குறித்து உலக சுகாதார ஸ்தாபனத்திடமிருந்து பெறப்பட்ட விவரங்கள் உள்ளடங்கிய 'பாதகமான நிகழ்வு' என்ற அறிக்கையினை ஆய்வு செய்ய நான்கு பேர் கொண்ட குழுவை இந்தியா நியமித்துள்ளது.
இதனை தொடர்ந்து மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட்டின் சோனிபட் யூனிட்டில் மருந்து உற்பத்தியை நிறுத்த ஹரியானா அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் சமீபத்திய ஆய்வின் போது கண்டறியப்பட்ட 'பல முரண்பாடுகளை' ஒரு வாரத்திற்குள் விளக்க வேண்டும் அல்லது உரிமத்தை இடைநீக்கம் அல்லது ரத்து செய்யவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.
ஆபிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகளின் இறப்புடன் இருமல் மருந்துகளை உலக சுகாதார ஸ்தாபனம் தொடர்புபடுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.
தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவின் உறுப்பினர்கள் ஒய்.கே.குப்தா, துணைத் தலைவர், மருந்துகளுக்கான தேசிய நிலைக்குழுவில் புனேவைச் சேர்ந்த பிரக்யா டி யாதவ், ஆர்டி பாஹ்ல், தொற்றுநோயியல் பிரிவு, மற்றும் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பைச் சேர்ந்த கே பிரதான் ஆகியோர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சந்தேகத்திற்குரிய மருந்துகளில் ஏற்றுக்கொள்ள முடியாத அளவு டைதிலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைகோல் ஆகியவை மாசுபாடுகளாக இருப்பதாக ஐநா அமைப்பு கூறியுள்ளது.
டீஎத்திலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைகோல் ஆகியவை மனிதர்களுக்கு நச்சுத்தன்மையுடையவையாகும். இதனால் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, சிறுநீர் கழிக்க இயலாமை, தலைவலி, மாற்றப்பட்ட மனநிலை மற்றும் கடுமையான சிறுநீரக பாதிப்பு ஆகியவை மரணத்திற்கு வழிவகுக்கும்.
செப்டம்பர் 29 திகதி இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரலுக்கு இந்தப் காம்பியாவில் 66 குழந்தைகளின் இறப்பு குறித்துத் தெரிவிக்கப்பட்டது என்று சுகாதார அமைச்சகம் தெளிவுபடுத்தியது. அதைக் கண்டறிய விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. ஹரியானா மாநில மருந்துக் கட்டுப்பாட்டாளருடன் இணைந்து இந்த விவகாரத்தில் உண்மை விவரங்கள் வெளிப்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM