நாட்டின் போசாக்கு குறைபாடு 2 சதவீதத்தால் அதிகரிப்பு ; உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட செயலணி

Published By: Digital Desk 3

13 Oct, 2022 | 02:38 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் நாட்டில் தற்போது போசாக்கு குறைபாடு 2 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி, போசாக்கு தொடர்பில் செயலணி நியமிக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார நெருக்கடி காரணமாக பிள்ளைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களின் போசாக்கு நிலை தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்கள். கடந்த வருடத்துடன்  ஒப்பிடுகையில் நாட்டில் தற்போது போசாக்கு குறைப்பாடு  2 சதவீதத்தால் அதிகரிகரித்துள்ளது.

12 சதவீதமாக காணப்பட்ட போசாக்கு குறைபாடு தற்போது 14 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. போசாக்கு குறைபாடுடனான பிள்ளைகள் தோற்றம் பெற்றால் அவர்கள் எம்மை சபிப்பார்கள். 

ஆகவே சுகாதார அமைச்சர் என்ற ரீதியில் பிள்ளைகளின் போசாக்கு மற்றும் கர்ப்பிணி தாய்மாரின் போசாக்கு குறித்து முழுமையான கவனம் செலுத்துவேன்.

பல்வேறு காரணிகளினால் நாட்டில் போசாக்கு குறைபாடு 2 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. மந்த போசணையை முழுமையாக இல்லாதொழிப்போம் என குறிப்பிட முடியாது. 14 சதவீத நிலைமையை 10 சதவீதமளவில் நிலைப்படுத்த விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரச மற்றும் தனியார் நிறுவன மட்டத்தில் உணவு பாதுகாப்பு தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக...

2026-04-15 02:19:11
news-image

களுவாஞ்சிக்குடியில் இறந்த கோழி இறைச்சி விற்பனை...

2026-04-14 23:42:34
news-image

கம்பஹாவில் பிரதமர் தலைமையில் சிங்கள, தமிழ்...

2026-04-14 19:57:56
news-image

வென்னப்புவ பகுதியில் 'ஹைடொப் துஷார'வின் பிரதான...

2026-04-14 17:38:09
news-image

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் 54 அதிவேக...

2026-04-14 17:20:25
news-image

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம் பெற்ற...

2026-04-14 15:14:44
news-image

வாழைச்சேனையைச் சேர்ந்த குடும்பஸ்தர் நீரில் மூழ்கி...

2026-04-14 15:06:44
news-image

முல்லைத்தீவு தேராவில் பகுதியில் கிணற்றிலிருந்து பெண்ணின்...

2026-04-14 14:56:42
news-image

டித்வா' சூறாவளியினால் சேதமடைந்த, அரசாங்கத்தின் இழப்பீட்டுத்...

2026-04-14 13:34:13
news-image

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல்...

2026-04-14 14:02:42
news-image

தேசிய மின்கட்டமைப்பைப் பாதுகாக்க சூரிய சக்தி...

2026-04-14 12:58:00
news-image

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பராபவ...

2026-04-14 13:22:07