உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடும் தேவை ஜனாதிபதிக்கு இல்லை - ஐக்கிய தேசிய கட்சி

Published By: Nanthini

12 Oct, 2022 | 05:20 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

தேர்தல் முறைமையில் திருத்தம் மேற்கொள்ளாமல் தேர்தலை நடத்துவதில் பயனில்லை. அதனால்தான் உள்ளூராட்சிமன்ற தேர்தல் முறைமையில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்போவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். 

அவ்வாறு இல்லாமல் தேர்தலை பிற்போடுவதற்கு எந்த தேவையும் ஜனாதிபதிக்கு இல்லை. 

அத்துடன் நாடு பொருளாதார ரீதியில் ஸ்திரமானதொரு நிலைக்கு வந்த பின்னர் எந்த தேர்தலை வேண்டுமானாலும் நடத்தலாம். 

அதனால்  பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்க அனைவரும் முன்வர வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி கம்பளை நகரசபை தலைவர் சமந்த அருணகுமார தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் புதன்கிழமை (ஒக் 12) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறைமையில் திருத்தம் மேற்கொண்டு அதனை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதாகவும், பாராளுமன்றத்தில் அதனை அனுமதித்துக்கொள்ள முடியாவிட்டால், மக்கள் கருத்துக்கணிப்புக்கு செல்வதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் எதிர்க்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை தெரிவித்து வருகின்றன. 

குறிப்பாக, உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதற்கே ஜனாதிபதி இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் உட்பட பலரும் தெரிவித்திருந்தனர்.

உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சிக் காலத்தை வர்த்தமானி அறிவிப்பின் ஊடாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரினால் அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை நீடிக்கப்பட்டிருக்கின்றது.

அதனால் உள்ளூராட்சி மன்ற தேர்தல் அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்குப் பின்னரே நடத்த முடியும். அதற்கு இன்னும் காலம் இருக்கின்றது. 

தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அத்துடன் நாடு எதிர்கொண்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலொன்றை நடத்துவதற்கான சூழல் நாட்டில் இருக்கின்றதா என நாங்கள் கேட்கின்றோம்.

அவ்வாறு தேர்தலை நடத்த  தீர்மானித்தாலும், வாக்கு கேட்டு மக்களுக்கு முன் செல்லும் நிலைமை வேட்பாளர்களுக்கு இல்லை. 

அதனால் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வருகின்றார். அவரின் இந்த வேலைத்திட்டங்களுக்கு அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியமாகும். 

அதனால்தான் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார். 

நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு கண்ட பின்னர் எந்த தேர்தலுக்கு வேண்டுமானாலும் செல்லலாம். 

உள்ளூராட்சி மன்ற தேர்தல் அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்குப் பின்னரே நடத்த முடியும். 

அந்த காலப்பகுதிக்கு முன்னர் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமானால், உரிய காலத்தில் எம்மால் தேர்தலுக்கு செல்லலாம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33