அரசாங்கத்தின் அழிவிற்கான அழைப்பாணையே வரி அதிகரிப்பு - கபிர் ஹசீம்

Published By: Digital Desk 5

13 Oct, 2022 | 07:09 AM
image

(எம்.மனோசித்ரா)

வருமான வரியை அதிகரிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் அரசாங்கத்தின் அழிவிற்கான அழைப்பாணையாகவே அமையும்.

உள்நாட்டு தொழிற்துறையினர் மீது பாரிய வரி சுமையை சுமத்தி , வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வரி சலுகையை வழங்குவது நியாயமற்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபிர் ஹசீம் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் புதன்கிழமை (12) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

இது அரசாங்கத்தின் அழிவிற்கான அழைப்பாணையாகவே அமையும். காரணம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வரி அறவீட்டு முறைமையால் சிறு தொழிற்துறைகள் பாரியளவில் பாதிக்கப்படும்.

சிறு தொழிற்துறையினர் மற்றும் ஏற்றுமதித் துறையினர் செலுத்தும் வரியானது 14 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இந்திய நிறுவனமொன்றுக்கு முழுமையாக வரி விலக்களிக்கப்பட்டது. உள்நாட்டு தொழிற்துறையினருக்கு வரி மேல் வரி சுமையை சுமத்திக் கொண்டிருக்கும் அரசாங்கம் , வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வரி சலுகையை வழங்கிக் கொண்டிருக்கிறது.

இது வரையில் வருட வருமானமாக 30 இலட்சம் பெறுபவர்களுக்கு வருமான வரி அறவிடப்பட்டது. ஆனால் தற்போது 15 இலட்சம் பெறுபவர்கள் வரி செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அது மாத்திரமின்றி கடந்த ஏப்ரல் முதல் தற்போது வரையான 6 மாதங்களுக்கு இந்த வரியை செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தினால் சிறு தொழில்கள் பாரியளவில் பாதிக்கப்படும். மக்கள் மீது மீண்டும் மீண்டும் இவ்வாறு வரி சுமையை சுமத்துவது நியாயமற்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளே தற்போது நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதன் கொள்ளைகளை நாமும் அவ்வாறே பின்பற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

பொருளாதார மேம்பாட்டுக்கு எம்மால் முன்னெடுக்கப்படக் கூடிய வேலைத்திட்டங்களை நாம் சர்வதேச நாணய நிதியத்திற்கு சமர்ப்பித்திருந்தால் இன்று இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.

1998 களில் மலேசியாவில் இது போன்ற பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்ட போது , மஹதீர் மொஹம்மட் இதனையே செய்தார். அதனால் அவர்களால் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள முடிந்தது.

அரசாங்கம் தற்போது எடுத்துள்ள தீர்மானத்திற்கமைய தொடர்ந்தும் பயணிக்க முடியாது. இது நியாயமற்ற ஒரு விடயமாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39