கடந்த வாரத்தில் மேற்கு நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி குறைந்தது இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மிக மோசமான பருவமழை வடமேற்கில் உள்ள கர்னாலி மாகாணத்தைத் தாக்கியதில் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
பனிச்சரிவு மற்றும் வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. மாகாணம் முழுவதும் குறைந்தது 22 பேர் காணாமல் போயுள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளனர்.
தொடர்ந்து மழை பெய்ந்து வருவதால மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மாகாணத்தின் சில பகுதிகளில், கர்னாலி நதி 12 மீ (39 அடி) வரை உயர்ந்துள்ளது என்று நேபாளத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆற்றின் மீது இருந்த பல தொங்கு பாலங்களும் அடித்து செல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அரசு அதிகாரிகள் ஹெலிகொப்டர்கள் மூலம் அப்பகுதிக்கு உதவிகளை அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில், மேற்கு நேபாளத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிப்பதாக ஐ.நா.வின் மனிதாபிமான அமைப்புகள் தெரிவித்துள்ளன.
நேபாளம் பருவமழை காலத்தின் முடிவை நெருங்குகிறது, இது பொதுவாக ஜூன் மாதத்தில் தொடங்கி அக்டோபரில் முடிவடைகிறது.
இந்த ஆண்டு மழையினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி குறைந்தது 110 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய அவசரகால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM