பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடளித்த ஊடகவியலாளரை அலுவலகத்துக்குள் முடக்கி அச்சுறுத்தல் : பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு பதிவு 

Published By: Vishnu

11 Oct, 2022 | 10:31 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

காலி முகத்திடலில் சட்டத்தரணிகள், மற்றும் தொழிற் சார் நிபுணர்கள் நடாத்திய ஆரப்பாட்டத்துக்கு இடையூறு விளைவித்து அடக்குமுறையை பிரயோகித்ததமை தொடர்பில் இரு உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான முறைப்பாடுகளை ஏற்க கோட்டை பொலிஸார் மறுத்துள்ள நிலையில் அது தொடர்பில் பொலிஸ் தலைமையகத்துக்கு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

 கொழும்பு மத்தி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரொஷான் டயஸ் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சர் நளின் தில்ருக் ஆகியோருக்கு எதிரான முறைப்பாடுகளையே இவ்வாறு ஏற்க கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மறுத்துள்ளார்.

இதன்போது முறைப்பாடளிக்கச் சென்ற  இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தனவையும்,  அவருடன் சென்ற சட்டத்தரணியையும் பொலிஸ் பொறுப்பதிகாரி சாகர லியனகே அவரது உத்தியோகபூர்வ அறைக்குள் பூட்டி, ஊடகவியலாளரை அச்சுறுத்தி அவரின் கைகளை மடக்கி, இழுத்து கைகளில் இருந்த தொலைபேசியை பறிக்க முற்பட்டதாகவும்,  கொடூரமான முறையில் நடந்துகொண்டதாகவும் கூறி பொலிஸ் தலைமையகத்துக்கு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

கோட்டை பொலிஸ் நிலையம், உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான முறைப்பாட்டை ஏற்க மறுத்தமையால், அது தொடர்பிலான முறைப்பாட்டையும், கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கொடூரமான நடத்தை தொடர்பில் தனியான முறைப்பாடும் இவ்வாறு இன்று (11) பகல்  பொலிஸ் தலைமையகத்தில்  பதிவு செய்யப்பட்டுள்ளதை பொலிஸ் தலைமையகம் உறுதி செய்தது.

கொழும்பு காலி முகத்திடலில் சட்டத்தரணிகள் மற்றும் தொழிற்சங்கத்தினர் இணைந்து 10 ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் நடத்திய  எதிர்ப்பு நடவடிக்கைக்கு தடை விதிக்குமாறு கோரி கோட்டை பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கோட்டை நீதவான் திலின கமகே நிராகரித்திருந்தார். அதன்படி அந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தன.

 இதன்போது அந் நடவடிக்கைகளுக்கு பொலிஸாரினால் இடையூறு ஏற்படுத்தப்பட்டது. எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க முன்னர் பொலிஸாருக்கு அறிவிக்கவில்லை என  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரொஷான் டயஸ் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சர் தில்ருக் ஆகியோர் குறிப்பிட்டு இடையூறு செய்திருந்தனர்.

எனினும் தாம் எழுத்து மூலம் கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு அறிவித்துள்ளதாக போராட்டக் காரர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த சம்பவத்தை மையப்படுத்தி முறைப்பாடளிக்க சென்ற போதே, கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரியினால் முறைப்பாட்டாளர் கடுமையாக அச்சுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21