பெரும்பாலான மக்கள் ராஜபக்ஷர்களுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவார்கள் - ரோஹித நம்பிக்கை

Published By: Digital Desk 5

10 Oct, 2022 | 05:27 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நாட்டின் பெரும்பாலான மக்கள் ராஜபக்ஷர்களுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவார்கள். எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் தேர்தல்களில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெறும் என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் திங்கட்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

காலிமுகத்திடல் போராட்டத்தை தொடர்ந்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பலவீனமடைந்து விட்டது,இனி அரசியலில் பாரிய பின்னடைவை எதிர்கொள்ளும் என பலர் அரசியல் பிரசாரங்களை முன்னெடுத்தார்கள்.இடைப்பட்ட காலத்தில் அரசியல் இலாபமும் தேடிக் கொண்டார்கள்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மாநாடு கடந்த 8ஆம் திகதி'ஒன்றிணைந்து எழுவோம் -களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்'என்ற தொனிப்பொருளில் களுத்துறையில் இடம்பெற்றது.பொதுஜன பெரமுனவின் இந்த எழுச்சி பிரதான அரசியல் கட்சிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த கூட்டம் எதிர்வரும் 16ஆம் திகதி கண்டி நகரில் இடம்பெறவுள்ளது.மூன்றாவது கூட்டம் புத்தளம் நகரில் இடம்பெறவுள்ளது.நாடளாவிய ரீதியில் இனி கூட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளோம்.

களுத்துறையில் இடம்பெற்ற கூட்டம் நகைப்புரியது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் மொட்டு சின்னத்தில் போட்டியிட்டதால் தான் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார்கள்.பொதுஜன பெரமுனவுக்கு புண்ணியம் கிடைக்கும் வகையில் அரசியலில் பிரவேசித்தவர்கள் தான் இன்று பொதுஜன பெரமுனவை விமர்சிக்கிறர்கள்.

நாட்டின் பெரும்பாலான மக்கள் ராஜபக்ஷர்களுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவார்கள்.எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் தேர்தல்களில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றிப்பெறும் என்பதை உறுதியாக குறிப்பிட்டுக் கொள்கிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் காணி மக்களுக்கே சொந்தம் -...

2025-02-13 03:11:18
news-image

இழப்பீட்டுக்கான விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளமை மகிழ்ச்சிக்குரியது...

2025-02-12 18:15:45
news-image

குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமா?...

2025-02-12 18:23:26
news-image

யாழ்ப்பாணத்தில் பழைய அரசியல் கலாசாரம் தோற்கடிக்கப்பட்டுள்ளது...

2025-02-12 18:13:39
news-image

இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஒரகல் நிறுவனம்...

2025-02-12 21:15:49
news-image

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தொடரும் தையிட்டி சட்டவிரோத...

2025-02-12 21:11:13
news-image

இழப்பீட்டுத் தொகை குறித்து பேசும் ஆளும்...

2025-02-12 18:05:05
news-image

ஐக்கிய தேசிய கட்சியுடனான பேச்சுவார்த்தை தற்காலிகமாக...

2025-02-12 18:23:50
news-image

உலக காலநிலை பிரச்சினைகளை முகங்கொடுக்க உலகளாவிய...

2025-02-12 19:49:02
news-image

தமிழக மீனவர்கள் நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு...

2025-02-12 18:22:25
news-image

எமது ஆட்சியில் மின்துண்டிப்புக்கு மின்சார சபையின்...

2025-02-12 18:24:55
news-image

பாடசாலை பிரதி அதிபரின் விடுதியில் திருட்டு...

2025-02-12 18:18:16