பசித்திருக்கும் பூதங்களுக்கு உணவளிக்கும் விழா கம்போடியாவில் ஆரம்பமாகியுள்ளது.
இறந்த மூதாதையர்களுக்காக இவ்விழா கொண்டாடப்படுவதுடன் பசித்திருக்கும் பூதங்களுக்கு உணவளிப்பதும் இவ்விழாவின் நோக்கம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பச்சும் பென் விழா எனவும், மூதாதையர்களுக்கான கெமர் விழா எனவும் இவ்விழா அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர், ஒக்டோபர் மாதங்களுக்கு இடையில் 15 நாட்கள் இவ்விழா நடத்தப்படும்.
இக்காலங்களில் நரகத்தின் வாயில் திறக்கப்படும் எனவும் அதையடுத்து பெரும் எண்ணிக்கையான பூதங்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு திறந்துவிடப்படும் எனவும் கம்போடிய மக்கள் நம்புகின்றனர்.
இப்பூதங்கள் பசி காரணமாக புதைகுழிகளிலும், ஆலயங்களிலும் உணவு தேடி திரியும் என நம்பும் மக்கள் இப்பூதங்களுக்காக பல்வேறு விதமான உணவுகளை படைக்கின்றனர்.
உணவு படைத்த குடும்பங்களுக்கு பசியாறும் பூதங்கள் ஆசி வழங்கும் எனவும், பசியுடன் இருக்கும் பூதங்கள் நரகத்துக்கு திரும்பிச் சென்று உறவுகளுக்கு துன்பங்களைக் கொடுக்கும் எனவும் அம்மக்கள் நம்புகின்றனர்.
இறந்த மூதாதையர்கள், உறவினர்களில் யார் சொர்க்கம் சென்றார்கள், யார் நரகத்துக்கு சென்றார்கள் என அறிந்துகொள்ள முடியாததால், பொதுவாக, இறந்த உறவுகளுக்கு நன்மையளிப்பதற்காக இவ்விழாவில் மக்கள் உணவு படையல்களை நடத்துகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM