22ஆவது திருத்தம் தொடர்பில் நீதி அமைச்சருடன் விசேட கலந்துரையாடல் - வீரசுமன வீரசிங்க

Published By: Nanthini

09 Oct, 2022 | 10:11 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ரசியலமைப்பின் 22ஆம் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் நீதி, சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சருடன் வருகிற செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளோம். 

இரட்டை குடியுரிமை உடையவர் அரசியலில் ஈடுபட முழுமையாக தடைவிதிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் என சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதாரத்தை நெருக்கடிக்குள்ளாக்கி, முழு நாட்டு மக்களையும் வீதிக்கிறக்கிய முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ அமெரிக்காவில் இருந்துகொண்டு அரசியல் காய் நகர்த்தலை முன்னெடுக்கிறார். 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பஷில் ராஜபக்ஷவின் நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்படுவது கவலைக்குரியது.

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தில் இரட்டை குடியுரிமை உடையவர் அரசியலில் செல்வாக்கு செலுத்துவதில் தடையேற்படுத்த வேண்டும் என்ற யோசனையை பிரதானமாக முன்வைத்தோம்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை தவிர்த்து ஏனைய அரசியல் கட்சிகளும் இந்த யோசனையை பிரதானமாக முன்னிலைப்படுத்தின.

'இரட்டை குடியுரிமையினை உடையவர் இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினராக அங்கம் வகிக்க தகுதியற்றவர்' என குறிப்பிடப்பட்டு அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூல வரைபு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

22ஆம் திருத்தச் சட்டமூல வரைபு மீதான விவாதத்தை கடந்த 6 மற்றும் 7ஆம் திகதிகளில் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு ஆளும் தரப்பினர் தடையேற்படுத்தியதால் விவாதம் பிற்போடப்பட்டது.

இரட்டை குடியுரிமை உடையவர் அரசியலில் செல்வாக்கு செலுத்த தகுதியற்றவர் என்ற ஏற்பாட்டை திருத்தியமைக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் உட்பட ஒருசிலர் ஏழு அறிவுடையவரின் வழிகாட்டலுக்கமைய குறிப்பிட்டுள்ளதால் 22ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 22ஆம் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் நீதி, சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சருடன் வருகிற செவ்வாய்க்கிழமை  பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளோம். 

இரட்டை குடியுரிமை உடையவர் அரசியலில் ஈடுபட முழுமையாக தடைவிதிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக...

2026-04-15 02:19:11
news-image

களுவாஞ்சிக்குடியில் இறந்த கோழி இறைச்சி விற்பனை...

2026-04-14 23:42:34
news-image

கம்பஹாவில் பிரதமர் தலைமையில் சிங்கள, தமிழ்...

2026-04-14 19:57:56
news-image

வென்னப்புவ பகுதியில் 'ஹைடொப் துஷார'வின் பிரதான...

2026-04-14 17:38:09
news-image

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் 54 அதிவேக...

2026-04-14 17:20:25
news-image

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம் பெற்ற...

2026-04-14 15:14:44
news-image

வாழைச்சேனையைச் சேர்ந்த குடும்பஸ்தர் நீரில் மூழ்கி...

2026-04-14 15:06:44
news-image

முல்லைத்தீவு தேராவில் பகுதியில் கிணற்றிலிருந்து பெண்ணின்...

2026-04-14 14:56:42
news-image

டித்வா' சூறாவளியினால் சேதமடைந்த, அரசாங்கத்தின் இழப்பீட்டுத்...

2026-04-14 13:34:13
news-image

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல்...

2026-04-14 14:02:42
news-image

தேசிய மின்கட்டமைப்பைப் பாதுகாக்க சூரிய சக்தி...

2026-04-14 12:58:00
news-image

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பராபவ...

2026-04-14 13:22:07