மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் பிரேரணை மக்களது பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வைக்கொடுக்காது - சுமந்திரன்

Published By: Digital Desk 5

09 Oct, 2022 | 10:00 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

ஜெனிவா மனித உரிமை பேரவையில் எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்த நாட்டையும் கட்டுப்படுத்தாது.  கட்டுப்படுத்தாத தீர்மானங்களைத்தான் இந்த  பேரவைக்கு நிறைவேற்ற முடியும்.

அதனால் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானம் மூலம் எமது மக்களது பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வைக்கொடுக்காது.

என்றாலும் இந்த பிரேரணை இலங்கைக்கு மிகவும் சவால் மிக்கதானதாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டிருக்கும் பிரேரணை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டிருக்கும் பிரேரணை மூலம் செய்யக்கூடியது என்ன என்பது தொடர்பாக தமிழ் மக்களுக்கு தெரியும்.

ஏனெனில் மனித உரிமை பேரவையில் 10வருடங்களாக இந்த பிரேரணை கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகின்றது. அதனால் இந்த பிரேரணை ஊடாக செய்ய முடியாததை தமிழ் மக்கள் எதிர்பார்ப்பதில்லை.

என்றாலும் தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கும் பிரேரணை மூலம் இலங்கையை சர்வதேச கண்காணிப்புக்குள் வைத்திருக்கும் பொறிமுறையொன்று ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.

அது தொடர்ச்சியாக இடம்பெறுகின்றது. அதேநேரம் மனித உரிமை பேரவைக்கு இருக்கும் அதிகாரங்களை வைத்துப்பார்ப்போமானால் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானம் முன்னேற்றகரமான தீர்மானம் என கருதலாம். ஆனால் அது எமது மக்களது பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வைக்கொடுக்காது.

அத்துடன் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மூலம் தாங்கள் எதிர்பார்த்த தீர்வுகள் இதன் மூலம் கிடைக்கவில்லை எனவும் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டிருப்பதாகவும் ஒருசிலர் தெரிவித்திருப்பதாக அறியக்கிடைத்தது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையினுடைய அதிகார வரம்பு என்ன என்பதை தெரியாதவர்கள்தான் இவ்வாறு கதைக்கின்றனர். இந்த பேரவையில் எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்த நாட்டையும் கட்டுப்படுத்தாது. கட்டுப்படுத்தாத தீர்மானங்களைத்தான் இந்த பேரவைக்கு நிறைவேற்ற முடியும். அதனால் பெரியளவில் இந்த பிரேரணை மூலம் எதிர்பார்க்க முடியாது.

அத்துடன் இந்த பேரவையின் மூலம் எமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என மக்கள் எதிர்பார்த்திருந்தால், அது மக்களின் தவறு அல்ல. அரசியல்வாதிகள்தான் இவ்வாறான தவறான எதிர்பார்ப்பை கொடுத்திருக்கின்றார்கள். ஆனால் இந்த பிரேரணையால் எதனை செய்ய முடியும் என்பது கடந்த 10வருடங்களாக இதனை பார்த்துவரும் மக்களுக்கு தெரிந்திருக்கும். அந்த நோக்கில் பார்க்கின்றபோது இந்த தீர்மானம் மிகவும் முன்னேற்றகரமான தீர்மானமாகவே காண்கின்றேன்.

அத்துடன்  இந்த பிரேரணை இலங்கைக்கு மிகவும் சவால் மிக்கதானதாகும். ஏனெனில் மனித உரிமை பேரவையின் பிரேரணை எந்த ஒரு நாட்டையும் கட்டுப்படுத்த முடியாது என்றாலும். நாட்டை கட்டியெழுப்புவதாக இருந்தால், இந்த பிரேரணைக்கு ஆதரவளித்த மற்றும்  நடுநிலையாக இருந்த நாடுகளின் உதவி இலங்கைக்கு மிக முக்கியமானதாகும். அதனால் இலங்கை அரசாங்கம் இந்த பிரேரணையில் உள்ளடக்கப்பட்டிருக்கும் தீர்மானங்களுக்கு ஒத்துழைக்காமல் இருக்கின்றவரைக்கும் பொருளாதார சிக்கலில் இருந்து மீள எழுவதுகூட கஷ்டமானதாகவே இருக்கும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பனிகளுடன் கலந்துரையாடி பெருந்தோட்ட மக்களின் சம்பள...

2025-02-19 17:55:02
news-image

கடந்த காலங்களை பற்றிப் பேசிக்கொண்டிருக்காமல் தேசிய...

2025-02-19 22:30:29
news-image

பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான...

2025-02-19 22:33:16
news-image

தேசிய பாதுகாப்பு பலவீனமடைய பாதாள உலகக்குழுக்கள்...

2025-02-19 21:44:50
news-image

தலதா மாளிகை மீதான குண்டுத் தாக்குதல்...

2025-02-19 17:48:15
news-image

திருகோணமலை நகரில் பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள்...

2025-02-19 21:48:04
news-image

பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளும் காலப்பகுதியிலாவது எனக்கு...

2025-02-19 21:34:23
news-image

எமது மலையக உறவுகளின் உழைப்பு உச்ச...

2025-02-19 17:54:14
news-image

பாதுகாப்புத் தரப்பினர் சிலர் பாதாள குழுக்களுடன்...

2025-02-19 17:46:45
news-image

வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக ராஜீவ் அமரசூரிய...

2025-02-19 21:00:04
news-image

யாழில் மூவர் மீது கல், கம்பிகளால்...

2025-02-19 20:32:23
news-image

வடக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசேட...

2025-02-19 17:45:12