(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)
நாட்டின் தலைவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இருக்கும் போது ஜெனிவாவில் இவ்வாறான நிலைமை ஏற்படும் என்று நாங்கள் நினைத்தும் பார்க்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமாதச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (ஒக் 7) இரண்டாவது நாளாக இடம்பெற்ற நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பாக ஜனாதிபதியின் உரை தொடர்பில் ஆளும் கட்சியினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
மனித உரிமைகள் பேரவையில் நாடு என்ற ரீதியில் பின்னடைவை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.
எங்களுக்கு எதிராக 20 நாடுகள் வாக்களித்துள்ளன. அத்துடன் 20 நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகியுள்ளன.
இதில் எங்களுக்கு ஆதரவாக இருந்த நாடுகளை பார்க்கும் போது அந்த நாடுகளுக்கு நாங்கள் எதிர்ப்பு இல்லை. ஏன் மற்றைய நாடுகளுடனும் கலந்துரையாடி பேச்சுவார்த்தை மூலமாக ஏன் எமது நாட்டின் பயணத்தை வெற்றிகொள்ள முடியவில்லை.
சர்வதேசத்தை வெற்றிகொண்ட அரசாங்கம் இருக்கின்றது என்றே நினைத்தோம். ஆனால் ஜெனிவாவில் எமக்கு ஏற்பட்ட தோல்வி மூலம் சர்வதேசத்தை வெற்றிகொள்வதில் அரசாங்கம் முழுமையாக தோல்வியடைந்துள்ளது.
அத்துடன் முதற்தடவையாக மனித உரிமை பேரவையில் பொருளாதார குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் வங்குரோத்து அரசாங்கம் தொடர்பிலும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் வாக்களிப்பில் இருந்து விலகிய நாடுகளை வெற்றிகொள்ளும் வேலைத்திட்டமொன்று அரசாங்கத்திடம் இருக்கவில்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM