(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம் வசீம்)
குருந்தூர் மலையில் முன்னெடுக்கப்படும் விகாரை நிர்மாணப் பணிகளுக்கு தடையேற்படுத்துதல் முற்றிலும் தவறானது. தமிழ் தேசிய கூட்டமைப்பினரே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுப்படுகிறார்கள்.
நாட்டில் ஏனைய பகுதிகளில் உள்ள இந்து ஆலயங்கள் குறித்து எவரும் பிரச்சினைகளை உருவாக்கவில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
பாராளுமன்றில் வெள்ளிக்கிழமை (7) உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தொடர்ந்து 50 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினரின் பெயர் பட்டியல் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நாடுகளினால் இராணுவத்தினருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவும் வாய்ப்புள்ளது. இது தமிழீழ விடுதலை புலிகளின் ஆதரவாளர்களுக்கு வாய்ப்பாக அமைந்து விடும்.
குருந்தூர் மலை வரலாற்ற சிறப்பு மிக்க பௌத்த விகாரையாகும். இந்த விகாரையின் புனரமைப்புக்கு தடையேற்படுத்தவது முற்றிலும் தவறானதொரு செயற்பாடாகும்.
வடக்கு மற்றும் கிழக்கில் பௌத்த விகாரைகள் காணப்பட்டால் அதற்கு எதிராக பிரச்சினைகளை தோற்றுவிக்கிறார்கள்.கூட்டமைப்பினரே அவ்வாறு செயற்படுகிறார்கள்.
ஜெனிவா கூட்டத்தொடர் இடம்பெறும் போது தான் வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் வாழ்க்கை மற்றும் சமய பிரச்சினைகள் இருப்பதாக குறிப்பிட்டுக்கொண்டு நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள். நாட்டில் உள்ள இந்து ஆலயங்கள் தொடர்பில் எவரும் பிரச்சினைகளை ஏற்படுத்தவில்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM