7 அறிவுடையவர் அவரது உதவியாளர்களை வைத்து 22 ஆவது திருத்தம் தொடர்பான விவாதத்தை தடுத்துள்ளார் - விமல்

Published By: Digital Desk 5

07 Oct, 2022 | 01:02 PM
image

(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்)

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்ட மூல விவாதம் பிற்போடப்பட்டுள்ளமை அரசாங்கத்தின் தன்னிச்சையான தீர்மானமாகும்.

ஏழு அறிவுடையவர் என வர்ணிக்கப்பட்டவர் அமெரிக்காவிலிருந்து கொண்டு அவரது உதவியாளர்கள் மூலம் 22 ஆவது திருத்தம் தொடர்பான விவாதத்தை தடுத்துள்ளமை கவலைக்குரியது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சபையில் தெரிவித்தார்.

சபாநாயகர் தலைமையில் வெள்ளிக்கிழமை (07) பாராளுமன்ற அமர்வு கூடிய போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூல வரைபை இரு நாட்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவிலும் , கட்சி தலைவர் கூட்டத்திலும் தீர்மானிக்கப்பட்டது.

இருப்பினும் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய வியாழக்கிழமை (06)   திருத்தச் சட்டமூல வரைபு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

22ஆவது திருத்தச்சட்ட மூல வரைபில் இரட்டை குடியுரிமை உள்ளவர் அரசியலில் அங்கம் வகிக்க தகுதியற்றவர் என குறிப்பிட்டுள்ளதால் ஆளும் தரப்பின் ஒருசிலர் அதற்கு எதிராக செயற்படுகிறார்கள்.

ஏழு அறிவினை உடையவர் என வர்ணிக்கப்பட்டவர் தற்போது அமெரிக்காவில் இருந்துக் கொண்டு தனது உதவியாளர்களுடன் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை விவாததத்துக்கு எடுத்துக் கொள்வதை தடுத்துள்ளமை கவலைக்குரியது.

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூல வரைபை விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதை அரசாங்கம் ஒருவார காலத்துக்கு பிற்போட்டுள்ளது.

இத்தீர்மானத்தை அரசாங்கம் தன்னிச்சையாக எடுத்துள்ளது.7 அறிவுடையவரின் தேவைக்காக பாராளுமன்றத்தை கூட்டி நாட்டு மக்களின் நிதியை வீண்விரயமாக்க வேண்டாம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அர்ச்சுனா எம்.பி. குறித்த சபாநாயகரின் தீர்மானம்...

2025-03-20 19:57:09
news-image

பதவி விலகினார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

2025-03-20 20:27:34
news-image

வாழைச்சேனை கடதாசி ஆலையை நவீன மயப்படுத்த...

2025-03-20 15:57:43
news-image

யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கான நிதி...

2025-03-20 16:01:42
news-image

செட்டிக்குளத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது...

2025-03-20 19:54:38
news-image

நாராஹேன்பிட்டியில் கட்டிடம் ஒன்றில் தீ விபத்து

2025-03-20 17:44:18
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; 107...

2025-03-20 17:28:45
news-image

யாழில் அதிக ஒலி எழுப்புவோருக்கு எதிராக...

2025-03-20 17:40:56
news-image

கராபிட்டிய வைத்தியசாலையில் கதிரியல் சிகிச்சைகள் ஸ்தம்பிதம்

2025-03-20 17:39:42
news-image

அமெரிக்க இந்தோ - பசிபிக் கட்டளைப்பீடத்தின்...

2025-03-20 17:28:26
news-image

யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தி வேட்பு...

2025-03-20 17:39:18
news-image

அலோசியஸிடமிருந்து நிதிபெற்ற அரசியல்வாதிகளின் பட்டியல் விரைவில்...

2025-03-20 15:19:36