(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்)
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்ட மூல விவாதம் பிற்போடப்பட்டுள்ளமை அரசாங்கத்தின் தன்னிச்சையான தீர்மானமாகும்.
ஏழு அறிவுடையவர் என வர்ணிக்கப்பட்டவர் அமெரிக்காவிலிருந்து கொண்டு அவரது உதவியாளர்கள் மூலம் 22 ஆவது திருத்தம் தொடர்பான விவாதத்தை தடுத்துள்ளமை கவலைக்குரியது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சபையில் தெரிவித்தார்.
சபாநாயகர் தலைமையில் வெள்ளிக்கிழமை (07) பாராளுமன்ற அமர்வு கூடிய போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூல வரைபை இரு நாட்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவிலும் , கட்சி தலைவர் கூட்டத்திலும் தீர்மானிக்கப்பட்டது.
இருப்பினும் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய வியாழக்கிழமை (06) திருத்தச் சட்டமூல வரைபு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
22ஆவது திருத்தச்சட்ட மூல வரைபில் இரட்டை குடியுரிமை உள்ளவர் அரசியலில் அங்கம் வகிக்க தகுதியற்றவர் என குறிப்பிட்டுள்ளதால் ஆளும் தரப்பின் ஒருசிலர் அதற்கு எதிராக செயற்படுகிறார்கள்.
ஏழு அறிவினை உடையவர் என வர்ணிக்கப்பட்டவர் தற்போது அமெரிக்காவில் இருந்துக் கொண்டு தனது உதவியாளர்களுடன் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை விவாததத்துக்கு எடுத்துக் கொள்வதை தடுத்துள்ளமை கவலைக்குரியது.
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூல வரைபை விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதை அரசாங்கம் ஒருவார காலத்துக்கு பிற்போட்டுள்ளது.
இத்தீர்மானத்தை அரசாங்கம் தன்னிச்சையாக எடுத்துள்ளது.7 அறிவுடையவரின் தேவைக்காக பாராளுமன்றத்தை கூட்டி நாட்டு மக்களின் நிதியை வீண்விரயமாக்க வேண்டாம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM