(இராஜதுரை ஹஷான்இஎம்.ஆர்.எம்.வசீம்)
நாட்டின் கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ள 3 ஆவது மசகு எண்ணெய் கப்பலுக்கு டொலர் செலுத்துவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் இன்று முதல் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் எரிபொருள் விநியோக கட்டமைப்பில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என வலுசக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர சபையில் தெரிவித்தார்.
சபாநாயகர் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை பாராளுமன்ற அமர்வு கூடிய போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
மசகு எண்ணெய் கப்பலுக்கு டொலர் செலுத்தியதால் கடந்த இரண்டு மாதகாலமாக சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திரகரிப்பு நிலையத்தின் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
3ஆவது மசகு எண்ணெய் கப்பல் நாட்டின் கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ள நிலையில் அதற்கு டொலர் செலுத்துவதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதால் துரதிஸ்டவசமாக சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திரகரிப்பு நிலையத்தை இன்று முதல் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திரகரிப்பு நிலையத்தை மூடுவதால் நாட்டில் எரிபொருள் விநியோக கட்டமைப்பில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளது. ஆகவே எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது என்பதை உறுதியாக குறிப்பிட முடியும்.
மூன்றாவது மசகு எண்ணெய் கப்பலுக்கு டொலர் செலுத்தியவுடன் மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் மீள ஆரம்பிக்கப்படும். எரிபொருள் கப்பல்களுக்கு உரிய கட்டணத்தை செலுத்த இலங்கை மத்திய வங்கி தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கி வருகிறது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM