பிரிட்டனைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் தென் ஆபிரிக்காவில் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டதுடன் அவர்களின் உடல்கள் முதலைகளுக்கு உண்ணக் கொடுக்கப்பட்டதாக தென் ஆபிரிக்க நீதிமன்றமொன்றில் கடந்த செவ்வாய்கிழமை தெரிவிக்கப்பட்டது.
74 வயதான, தோட்டக்கலை நிபுணர் ரொட் சாண்டர்ஸ், அவரின் மனைவியான கலாநிதி ரசெல் சாண்டர்ஸ் எனும் நுண்ணுயிரியலாளர் ஆகியோரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
2018 பெப்ரவரியில் தென் ஆபிரிக்காவிலுள்ள சரணாலயம் ஒன்றில் அரிய வகையான தாவர விதைகளை அவர்கள் தேடிக் கொண்டிருந்தபோது இவர்கள் காணாமல் போயினர்.
டர்பன் நகரிலிருந்து 30 மைல் தூரத்திலுள்ள மேற்படி சரணாலயத்தில் தாம் முகாமிடப் போவதாக ஊழியர் ஒருவரிடம் இவர்கள் தெரிவித்தனர். அதன் பின்னர் இவர்கள் திரும்பிவரவில்லை.
இவர்கள் காணாமல் போயுள்ளனர் என 2018 பெப்ரவரி 10 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பான வழக்கு தென் ஆபிரிக்காவின் டர்பன் நகரிலுள்ள டர்பன் மேல் நீதிமன்றத்தில் தற்போது நடைபெறுகிறது.
இவ்வழக்கில் பொலிஸார் வாக்குமூலம் அளிக்கையில், இத்தம்பதியினர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட தினத்தில், ஒரு பெண் உட்பட மூவரால் கடத்தப்பட்டதாகவும் அவர்களின் உடமைகள் அபகரிக்கப்பட்ட பின்னர் அவர்கள் கொல்லப்பட்டனர் எனவும் தெரித்துள்ளனர்.
சந்தேக நபர்களால் ஒரு தம்பதியினர் 2018 பெப்ரவரி 15 ஆம் திகதி கைது செய்யப்பட்னர் எனவும் மற்றொருவர் சில வாரங்களின் பின்னர் கைதானார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய தம்பதியின் டசலங்களை உடல்களை பை ஒன்றில் கட்டி, ஆற்றில் வீசியதாக சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார்.
இச்சடலங்களின் சிதைவுகள் சில நாட்களில் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், அவர்கள் பல மாதங் களாக அடையாளம் காணப்படாமல் இருந்தனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM