ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை இலங்கை தொடர்பில் சர்வதேச சமூகம் தொடர்ந்தும் அவதானத்தை செலுத்தவேண்டியுள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்;ளது என சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான பிரதி பிராந்திய இயக்குநர் தினுசிகா திசநாயக்க தெரிவித்துள்ளார்.
இதுசரியான பாதையிலான வரவேற்கத்தக்க நடவடிக்கை என குறிப்பிட்டுள்ள அவர் எனினும் இன்னமும் பல நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள அரசியல் பொருளாதார நெருக்கடிகளால் இடம்பெறக்கூடிய மனித உரிமை மீறல்கள் உட்;பட பரந்துபட்ட மனித உரிமை மீறல்களிற்கு தீர்வை காண்பதற்கான நிபுணர் பொறிமுறையை முன்வைக்குமாறு சிவில் சமூகத்தினர் விடுத்த வேண்டுகோளிற்கு மனித உரிமை பேரவை பதிலளிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கான தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும்,இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் இழப்பீடுகள் தொடர்பான அலுவலகம் மற்றும் குற்றச்செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள் சாட்சிகளை பாதுகாப்பதற்கான தேசிய அதிகார சபை போன்ற மனித உரிமை மீறல்களிற்கான நிவர்த்தி அமைப்புகளின் நடவடிக்கைகள் வலுவான விதத்தில் காணப்படுவதை உறுதி செய்யவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையின் அடிப்படையில் ஐக்கிய நாடுகளின் அனைத்து உறுப்புநாடுகளும் சர்வதேச பொறுப்புக்கூறலை அதிகரிக்கவேண்டும் என தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான பிரதி பிராந்திய இயக்குநர் தினுசிகா திசநாயக்க சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழும் விசாரணைகளை வழக்குகளை முன்னெடுக்கவேண்டும்,சாத்தியமான பட்சத்தில் சர்வதேச நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM