மத்திய வங்கி பிணைமுறி மோசடி: பிரதமர் பிரதான சூத்திரதாரி

Published By: MD.Lucias

21 Nov, 2016 | 09:25 PM
image

(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் பிரதான சூத்திரதாரி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவாகும். ஆகவே பிரதமர் ஆட்சி பொறுப்பில் இருக்கும் வரைக்கும் இது குறித்தான விசாரணை உரிய முறையின் பிரகாரம் இடம்பெறாது. இதற்கு தீர்வும் கிடைக்காது. எனவே பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒன்றிணைந்த எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கோரினார். 

பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை 2017 ஆம் ஆண்டுக்கான வரவு –  செலவுத் திட்டத்தின் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு செலவினம் தொடர்பான குழு நிலை விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்;

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு ஏற்ற வகையிலேயே பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாதுகாப்பிற்கு கடந்த முறையை விடவும் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. 

அது மாத்திரமின்றி ஐக்கிய தேசியக் கட்சி கொள்கையில் இதுவரையும் மாற்றமில்லை. அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தல் கொள்கை இன்னமும் நடைமுறையில் உள்ளது. இலாபம் பெற முடியமான நிறுவனங்களை தான் தனியார் மயப்படுத்துகின்றார்கள். 

அத்துடன் அம்பாந்தோட்டை விமான நிலையத்தையும் துறைமுகத்தையும் விற்க முனைகின்றீர்கள். ஏன் இப்படி  செய்கின்றீர்கள். எமது வளங்களை பாதுகாத்து நாட்டை வளர்ச்சிக்கு உட்படுத்த முடியாதா? ஏன் மக்களின் சாபத்திற்கு உள்ளாகின்றீர்கள்? 

அத்துடன் பிணைமுறி விவகாரத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருக்கும் வரைக்கும் இதில் விசாரணை நிறைவு பெறாது. ஏனெனில் பிணைமுறி விவகாரம் தொடர்பில் பிரதான சூத்திரதாரி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவாகும். ஆகவே பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுர திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:47:53
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38