(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)
இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் பிரதான சூத்திரதாரி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவாகும். ஆகவே பிரதமர் ஆட்சி பொறுப்பில் இருக்கும் வரைக்கும் இது குறித்தான விசாரணை உரிய முறையின் பிரகாரம் இடம்பெறாது. இதற்கு தீர்வும் கிடைக்காது. எனவே பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒன்றிணைந்த எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கோரினார்.
பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை 2017 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு செலவினம் தொடர்பான குழு நிலை விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்;
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு ஏற்ற வகையிலேயே பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாதுகாப்பிற்கு கடந்த முறையை விடவும் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.
அது மாத்திரமின்றி ஐக்கிய தேசியக் கட்சி கொள்கையில் இதுவரையும் மாற்றமில்லை. அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தல் கொள்கை இன்னமும் நடைமுறையில் உள்ளது. இலாபம் பெற முடியமான நிறுவனங்களை தான் தனியார் மயப்படுத்துகின்றார்கள்.
அத்துடன் அம்பாந்தோட்டை விமான நிலையத்தையும் துறைமுகத்தையும் விற்க முனைகின்றீர்கள். ஏன் இப்படி செய்கின்றீர்கள். எமது வளங்களை பாதுகாத்து நாட்டை வளர்ச்சிக்கு உட்படுத்த முடியாதா? ஏன் மக்களின் சாபத்திற்கு உள்ளாகின்றீர்கள்?
அத்துடன் பிணைமுறி விவகாரத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருக்கும் வரைக்கும் இதில் விசாரணை நிறைவு பெறாது. ஏனெனில் பிணைமுறி விவகாரம் தொடர்பில் பிரதான சூத்திரதாரி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவாகும். ஆகவே பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM