இலங்கையின் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள தொடர்பில் பாரிஸ் கிளப்பின் கடன் வழங்குநர்கள் இந்தியா சீனாவை தொடர்புகொண்டுள்ளனர்.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை ஒருங்கிணைப்பது தொடர்பில் பாரிஸ் கிளப்பின் கடன்வழங்குநர்கள் இந்தியா சீனாவை தொடர்புகொண்டுள்ளனர் என இந்த விடயங்கள் குறித்து நன்கறிந்த நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வளர்ந்துவரும் நாடுகளின் கடப்பாடுகள் தொடர்பில்மீள்செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காக கடன்வழங்கியவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியையே பாரிஸ் கிளப் மேற்கொண்டுள்ளது.
மேற்குலகின் இரு தரப்பு கடன்வழங்குநர்களை - செல்வந்த நாடுகளை உள்ளடக்கிய பாரிஸ் கிளப் இணைந்து செயற்படுவதற்கு அழைப்பு விடுத்து ஆகஸ்ட் மாதத்தில் சீனா இந்தியா நாடுகளிற்கு கடிதம் அனுப்பியுள்ளது இன்னமும் அதற்கு பதில் இல்லை என தனது பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைகள் தொடர்வதால் தனது பெயரை வெளியிடுவதை விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்;கை தொடர்பாக ஒருங்கிணைப்பது உத்தியோகபூர்வ கடன்வழங்குநர்கள் குழுவை ஏற்படுத்துவதற்கு உதவலாம் அல்லது கடன்மறுசீரமைப்பு தொடர்பில் வழமையான சந்திப்புகளை நடத்த உதவலாம் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதிக்கு இந்த முயற்சிகள் குறித்து தெரியாது.
இலங்கையை தளமாக கொண்ட ஆசிய இராஜதந்திரியொருவர் பாரிஸ்கிளப் தனது அமைப்பில் அங்கத்துவம் வகிக்காத கடன் வழங்குநர்களுடன் தொடர்புகொண்டுள்ளது என்பதை உறுதி செய்துள்ளார்.
சீன இந்திய அதிகாரிகளிடம் கருத்துக்களை பெற முடியவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM