(எம்.வை.எம்.சியாம்)
கொழும்பு- கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் இருவர் 04 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கிராண்ட்பாஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 28 ஆம் திகதி கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட களனி பாலத்திற்கு அருகில் நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் அதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கொழும்பு- சேதுவத்த பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 29 மற்றும் 32 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து துப்பாக்கி, இலக்க தகடுகள் மாற்றப்பட்ட மோட்டார்சைக்கிள் மற்றும் 4 தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் சந்தேக நபர்களில் ஒருவர் கடலோர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியின் ஜிந்துப்பிட்டி பிரதேசத்தில் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM