போக்கர் சூதாட்டத்தில் எதிர்பாராத வகையில் வெற்றியீட்டிய பெண்ணொருவர், மோசடியான முறையில் இவ்வெற்றியை பெற்றதாக அவருடன் போட்டியிட்ட மற்றொரு சூதாட்டக்காரர் குற்றம் சுமத்தியுள்ளார் அதிர்வு ஏற்படுத்தக்கூடிய மோதிரம் ஒன்றை பயன்படுத்தியும் இவ்வெற்றியை அப்பெண் பெற்றிருக்கலாம் என கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல போக்கர் (poker) சூதாட்டக்காரர் காரெட் அடேல்ஸ்டெய்ன் பங்குபற்றிய போக்கர் சூதாட்டத்தில், ரொபி ஜேட் லியு எனும் பெண் வெற்றியீட்டினார்.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரிலுள்ள ஹஸ்ட்லர் கசினோவில் கடந்த வியாழக்கிழமை இந்த சூதாட்டப் போட்டி நடைபெற்றது. இதில்; ரொபி ஜேட் லியு 269,000 டொலர்களை வென்றார்.
இவ்வெற்றி சூதாட்ட உலகில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
காரெட் அடேல்ஸ்டெய்ன் போக்கர் சூதாட்டத்தில் பிரசித்தி பெற்றவர். அவருடன் மோதிய ரொபி ஜேட் லியு இச்சூதாட்டத்தில் புதியவர் என்பது இதற்குப் பிரதான காரணம்.
35 வயதான ரொபி ஜேட் லியு சுமார் ஒரு வருடமாக இவ்விளையாட்டில் ஈடுபட்டு வருகிறார் என அவரின் பயிற்றுநர் தெரிவித்துள்ளார்.
ஆனால், 36 வயதனான அடேல்ஸ்டெய்ன், சுமார் ஒரு தசாப்த காலமாக, தொழிற்சார் ரீதியில் அவர் போக்கர் விளையாட்டில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
காரெட் அடேல்ஸ்டெய்ன் தன்னை அச்சுறுத்தியாகவும் லியு தெரிவித்துள்ளார்.
எனினும், இக்குற்றச்சாட்டை காரெட் அடேல்ஸ்டெய்ன் நிராகரித்துள்ளார். அதேவேளை, ரொபி ஜேட் லியு
ஏதோ ஒரு வழியில் மோசடி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். எனினும் குறித்த கசினோ நிலையம் இதில் எந்த வழியிலும் சம்பந்தப்படவில்லை என அடேல்ஸ்டெய்ன் கூறியுள்ளார்.
இச்சூதாட்டத்தில் வெற்றியீட்டுவதற்கான ஆலோசனைகளை அதிர்வு ஏற்படுத்தும் மோதிரம் ஒன்றின் மூலம் லியு பெற்றிருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இக்குற்றச்சாட்டை ரொபி ஜேட் லியுவும் அவரின் பயிற்றுநர் பராஸ் ஜெகாவும் நிராகரித்துள்ளனர்.
செஸ் (சதுரங்கம்) விளையாட்டில் உலகின் முதல்நிலை வீரரான நோர்வேயின் மெக்னஸ் கார்ல்சனை (35) அமெரிக்காவைச் சேர்ந்த 19 வயது வீரர் ஹான்ஸ் நீமன் அண்மையில் அதிர்ச்சிகரமாக தோற்கடித்தமை பரபரப்பை ஏற்படுத்தியது.
அதையடு;த்து மற்றொரு போட்டியில் இவர்கள் இருவரும் மோதியபோது, ஒரு நகர்த்தலின் பின்னர் போட்டியிலிருந்த கார்ல்சன் வெளியேறினார். ஹான்ஸ் நீமன் மோசடி செய்கிறார் மெக்னஸ் கார்ல்சன் குற்றம் சுமத்தியமை சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், போக்கர் விளையாட்டிலும் அதைப் போன்ற குற்றச்சாட்டு ரொபி ஜேட் லியுவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM