வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் கிண்ணையடி குட்டிக்காடு எனும் காட்டுப் பிரதேசத்தில் வாழைச்சேனை ஊழல் ஒழிப்பு பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
ஏனையோர் தப்பி ஓடியுள்ளதாகவும் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இதன்போது 108500 மில்லி லீற்றர் கசிப்பு உற்பத்திக்கு பயன்படும் கோடாவும்,4500 மில்லி லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்தபண்டாரவின் வழிகாட்டலில் பிரதேசத்தில் இவ் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட நபர் மற்றும் பொருட்க்கள் அத்தனையும் வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதி மன்றத்தில் சமர்பிப்பதற்கான நடவடிக்கையினை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM