(எம்.வை.எம்.சியாம்)
வெயாங்கொடை பிரதேசத்தில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் வெயாங்கொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சந்தேக நபர்கள் நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது
வெயாங்கொடை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெயாங்கொடை நகரப்பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 6 கிராம் 200 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் 35, 38 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் வெயாங்கொடை மற்றும் திவுலப்பிட்டிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
மேலும் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சந்தேக நபர்களின் பாரமுல்ல, வெயங்கொட பிரதேசத்தில் உள்ள வீட்டு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுகள், கூரிய ஆயுதங்கள் மற்றும் 40 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருட்களும் பொலிஸாரால் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் மாளிகாவத்தை, கடவத்தை, தெமட்டகொட, கலேவெல மற்றும் குருநாகல் போன்ற பிரதேசங்களில் கூரிய ஆயுதங்களை காண்பித்து பணம் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவங்களுடன் தொடர்புடையவர்களாவர்.
சந்தேகநபர்கள் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பட்டுள்ளார்கள்
சம்பவம் தொடர்பில் வெயாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM