காத்தான்குடி கடலில் தோணியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக இன்று திங்கட்கிழமை (03) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கர்ப்பலா பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய மீராசாயிப் முபாரக் என்ற மீனவர் சம்பவதினமான நேற்று இரவு தனது தோணியில் பாலமுனை கடற்கரையில் இருந்து கடலில் மீன்பிடிக்க சென்றவர் இன்று (03) திங்கட்கிழமை காலை வரை கரைக்கு திரும்பாததையடுத்து அவரை கடலில் தேடியபோதும் அவரை கண்டுபிடிக்கவில்லை
இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து அவரை கடற்படையினரின் உதவியுடன் தேடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இதேவேளை நாட்டில் தற்போது காலநிலை மாற்றத்தால் கடும் காற்று வீசிவருவதால் காலி தொடக்கம் அம்பாறை வரையும் மீனவர்கள் செல்லவேண்டாம் என அரசாங்கம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM