டீசலின் விலையை குறைக்க முடியாது - அமைச்சர் காஞ்சன விஜேசேகர

Published By: Vishnu

03 Oct, 2022 | 04:15 PM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைப்பை தொடர்ந்து தேசிய மட்டத்தில் எரிபொருள் விலையை தீர்மானிக்க முடியாது.

பெற்றோல் இறக்குமதியில் இலாபம் கிடைக்கப் பெற்றதால் விலை குறைக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் டீசலின் விலையை குறைக்க முடியாது என வலுசக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றில் திங்கட்கிழமை (03) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்களின் போது எதிர்க்கட்சியின் உறுப்பினர் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டில் எரிபொருள் விநியோக கட்டமைப்பில் சிக்கல் காணப்படுகிறது என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள். மட்டுப்பாடுகளுக்கமைய எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது. விவசாயத்துறை நடவடிக்கைகளுக்கு திட்டமிட்ட வகையில் எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது.

விவசாய நடடிக்கைகளுக்கு 70 சதவீதமளவில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது.மாவட்ட மற்றும் பிரதேச செயலக பிரிவுகளின் ஒழுங்குப்படுத்தலுக்கமைய விவசாயிகளுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படுகின்றன.

மசகு எண்ணெய் ஊடாக மாத்திரம் நாட்டின் ஒட்டுமொத்த எரிபொருள் தேவையினையும் பூர்த்தி செய்ய முடியாது.மொத்த எரிபொருள் தேவையின் 30 சதவீதமளவு மாத்திரம் தான் மசகு எண்ணெய் சுத்திரகரிப்பு ஊடாக பெற்றுக்கொள்ளப்படுகிறது.

70 சதவீதமளவு எரிபொருள் இறக்குமதி செய்யப்படுகிறது. உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைவடையும் போது தேசிய மட்டத்தில் எரிபொருளின் விலையை குறைக்க முடியாது. டீசல் விநியோகத்தில் இதுவரை காலமும் வழங்கப்பட்ட நிவாரணம் நீக்கப்பட்டுள்ளது.

டீசல் விநியோகத்தின் நிவாரணம் நீக்கப்பட முன்னர் ஒரு லீற்றர் டீசல் விநியோகத்தின் போது 30 ரூபா நட்டத்தை எதிர்க்கொள்ள நேரிட்டது.

ஆகவே தற்போது டீசலின் விலையை குறைக்க முடியாது.பெற்றோல் இறக்குமதியில் 70 சதவீத இலாபத்தை பெற்றுக்கொண்டுள்ளதால் பெற்றோல் விலை குறைக்கப்பட்டது.

எதிர்வரும் 14 நாட்களுக்குள் எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படும் போது தற்போதைய விலை திருத்தம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைப்பினை கொண்டு தேசிய மட்டத்தில் எரிபொருள் விலையை தீர்மானிக்க முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இழப்பீட்டுக்கான விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளமை மகிழ்ச்சிக்குரியது...

2025-02-12 18:15:45
news-image

குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமா?...

2025-02-12 18:23:26
news-image

யாழ்ப்பாணத்தில் பழைய அரசியல் கலாசாரம் தோற்கடிக்கப்பட்டுள்ளது...

2025-02-12 18:13:39
news-image

இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஒரகல் நிறுவனம்...

2025-02-12 21:15:49
news-image

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தொடரும் தையிட்டி சட்டவிரோத...

2025-02-12 21:11:13
news-image

இழப்பீட்டுத் தொகை குறித்து பேசும் ஆளும்...

2025-02-12 18:05:05
news-image

ஐக்கிய தேசிய கட்சியுடனான பேச்சுவார்த்தை தற்காலிகமாக...

2025-02-12 18:23:50
news-image

உலக காலநிலை பிரச்சினைகளை முகங்கொடுக்க உலகளாவிய...

2025-02-12 19:49:02
news-image

தமிழக மீனவர்கள் நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு...

2025-02-12 18:22:25
news-image

எமது ஆட்சியில் மின்துண்டிப்புக்கு மின்சார சபையின்...

2025-02-12 18:24:55
news-image

பாடசாலை பிரதி அதிபரின் விடுதியில் திருட்டு...

2025-02-12 18:18:16
news-image

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 139 பேருக்கு...

2025-02-12 18:24:06