மட்டக்களப்பில் உள்ள கிழக்குப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, 100 புலமைப்பரிசில்களை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.
இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு, புலமைப்பரிசில்கள், 'இந்தியாவில் பயிலுங்கள்' நிகழ்ச்சித்திட்டம் மற்றும் தேசிய அறிவுசார் வலையமைப்பு உள்ளிட்ட பல்வேறு செயற்திட்டங்கள் ஊடாக உயர்கல்வித்துறையில் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் உயர்ஸ்தானிகர் இதன்போது அழைப்புவிடுத்துள்ளார்.
இதுஇவ்வாறிருக்க மறுபுறம் கிழக்கில் சுகாதார உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்குப் பங்களிப்புச்செய்யக்கூடியவகையில் இந்திய நன்கொடை உதவித்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை அலகினை நிர்மாணிக்கும் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும் கிழக்கு விஜயத்தின்போது உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மீளாய்வுசெய்துள்ளார்.
மேலும் இவ்விஜயத்தின்போது மட்டக்களப்பிலுள்ள இராமகிருஷ்ண மிஷன், காத்தான்குடி பதுரியா ஜும்ஆ மசூதி, காத்தான்குடி முஹைதீன் மெத்தை பெரிய ஜும்ஆ பள்ளிவாசல், திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆகிய மத வணக்கஸ்தலங்களுக்குச்சென்று மத வழிபாடுகளிலும் ஈடுபட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM