யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, மணற்காட்டு பகுதியில் சட்டவிரோதமான முறையில் சவுக்கு மரங்களை வெட்டிய குற்றச்சாட்டில் இரு பெண்கள் உள்ளிட்ட 07 பேர் 29 ஆம் திகதி வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மணற்காட்டில் சட்டவிரோதமான முறையில் சவுக்கு மரங்கள் வெட்டப்பட்டு துவிச்சக்கர வண்டிகளில் கடத்தப்படுவதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு இரகசிய தகவல்கள் கிடைக்கப்பெற்றது.
அதனை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் , அப்பகுதியில் சவுக்கு மரங்களை வெட்டி துவிச்சக்கர வண்டியில் கடத்த முற்பட்ட இரண்டு பெண்கள் உள்ளிட்ட 07 பேரை கைது செய்துள்ளதுடன், அவர்களின் துவிச்சக்கர வண்டிகளையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM