கனகராசா சரவணன்
காத்தான்குடி பிரதேசத்தில் வீடு ஒன்றை உடைத்து அங்கிருந்த 3 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான மடிக்கணினி ஒன்றை திருடிச் சென்ற 15,16 வயதுடைய இரு சிறுவர்களை இன்று வெள்ளிக்கிழமை (30) கைது செய்துள்ளதாகவும் திருடப்பட்ட மடிக்கணினியை மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கர்ப்பலா பிரதேசத்தில் சம்பவதினமான 29 ஆம் திகதி வியாழக்கிழமை பகல் குறித்த வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்ற சந்தர்ப்பத்தில் வீட்டின் கதவை உடைத்து அங்கிருந்த அப்பிள் ரக மடிக்கணினி ஒன்றை திருடிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் மடிக்கணினியை திருடிச் சென்ற அந்தபிரதேசத்தைச் சேர்ந் 15, 16 வயதுடைய இருசிறுவர்களை கைது செய்ததுடன் மடிக்கணினியை மீட்டுள்ளனர்.
இதில் கைதுசெய்யப்பட்ட சிறுவர்கள் பாடசாலைக்கு செல்வதில்லை எனவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதேவேளை காத்தான்குடி பிரதேசத்தில் 180 மில்லிக்கிராம் ஐஸ்போதை பொருளுடன் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM