அமெரிக்காவைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர், சூறாவளிக்கு மத்தியில் தொலைக்காட்சி ஊடாக செய்தி வழங்கிக் கொண்டிருந்தபோது, மழையிலிருந்து தனது ஒலிவாங்கியை பாதுகாப்பதற்காக அதை ஆணுறையினால் மூடி வைத்திருந்தமை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஐயான் சூறாவளி, கரீபியன் மற்றும் அமெரிக்க கிழக்குக் கரையோரப் பிராந்தியங்களை தாக்கியுள்ளது.
புளோரிடா மாநிலத்தின் போர்ட் மேயர்ஸ் நகரில், ஐயான் சூறாவளி நிலைவரம் தொடர்பாக செய்தியாளர் கைலா காலேர் நேரடியாக செய்திச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்.
அவ்வேளையில் மழை பெய்து கொண்டிருந்ததால், தனது ஒலிவாங்கயை (மைக்) அவர் ஆணுறை ஒன்றினால் மூடி வைத்திருந்தார்.
தொலைக்காட்சி அலைவரிசையில் இச்செய்தி ஒளிபரப்பை பார்த்துக் கொண்டிருந்த பலருக்கு இக்காட்சி வியப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக சமூக வலைத்தளங்களிலும் பலர் விமர்சித்தனர்
எனது ஒலிவாங்கியின் மேல் என்ன உள்ளது என பெரும் எண்ணிக்கையானோர் கேட்கின்றனர் என கைலா காலேர் தெரிவித்தள்ளார்.
'அது என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்களோ அதுவே தான். அது ஓர் ஆணுறை. அது எனது ஒலிவாங்கியை பாதுகாக்கிறது. இந்த ஒலிவாங்கியை நனைய விட முடியாது.
அங்கு அதிக காற்றும் அதிக மழையும் இருந்தது. எனவே, ஒலிவாங்கியை ஆணுறையொன்றினால் மூடினோம்' என கைலா காலேர் கூறியுள்ளார்.
கைலாவின் கையில் ஒலிவாங்கி இருக்கும் படத்தை அவரின் சக ஊடகவியலாளர் ஜெப் புத்தேராவும் சமூ வலைத்தளத்தில் வெளியிட்டு, 'ஆம் அது ஓர் ஆணுறை. நூம் பாதுகாப்பாகன செய்தி அறிக்கையிடல் முறையை பின்பற்றுகிறோம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM