கொலை, கொள்ளையில் ஈடுபட்ட நபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலி !

30 Sep, 2022 | 10:26 AM
image

கம்பஹா – நெதகமுவ பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கம்பஹா பிரதேசத்தில், பெண்ணொருவரின் கைப்பையை பறிக்க முயன்றதுடன், ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த நபரொருவரே இவ்வாறு பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.

35 வயதான மேற்படி நபர் சில தினங்களுக்கு முன்னர் கம்பஹா அக்கரவிட்ட பகுதியில் ஒரு பெண்ணின் கைப்பையை பறிக்க முயன்றார். 

அப்பெண்ணின் கூக்குரல் கேட்டு உதவிக்கு இருவர் வந்தபோது, அவர்களில் ஒருவர் மேற்படி நபரின் கத்திக் குத்தில் பலியானார். மற்றொருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நெதகமுவ பகுதியிலுள்ள வீடொன்றில் மறைந்திருந்த குறித்த சந்தேகநபரை பொலிஸார் இன்று (30) அதிகாலை கைது செய்ய முயற்சித்துள்ளனர்.

இந்நிலையில், சந்தேக நபர் கத்தியால் தாக்க முயன்றதாகவும், அப்போது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தநிலையில், மேற்படி நபர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த சந்தேகநபர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திர சிகிச்சைக்குட்படுத்தப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33