பாலத்துறையில் தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குங்கள் - ஜப்பானில் இருந்து ஜனாதிபதி அறிவுறுத்தல்

Published By: Digital Desk 4

27 Sep, 2022 | 10:23 PM
image

கொழும்பு - பாலத்துறை பகுதியில் தீயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பானில் இருந்து அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

பாலத்துறை கஜிமாவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் இன்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு கொழும்பு மாவட்டச் செயலாளர், முப்படையினர், தீயணைப்புப் படையினர், சுகாதாரத் திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து அரச நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து, அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மக்களின் தேவைகளைக் பூர்த்திசெய்யுமாறும், இன்று இரவு முதல் அவர்களுக்கான வசதிகளை உடனடியாக வழங்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

அதன்படி, தீயை அணைக்க தேவையான அதிகபட்ச தலையீட்டை வழங்கவும், தேவையான அனைத்து வசதிகளையும் உடனடியாக வழங்கவும் அனைத்து துறைகளும் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளன.

இதேவேளை, தீயினால் ரும் சிரமத்திற்கு உள்ளாகும் தாய்மார்கள், பெண்கள் மற்றும் சிறு பிள்ளைகளுக்கு தேவையான வசதிகள் தொடர்பிலும் அவதானிக்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி மேலும் அறிவுறுத்தல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துபாயில் ஒளிந்துகொண்டு இலங்கையில் போதைப்பொருள் கடத்தலில்...

2025-11-07 03:19:52
news-image

யாழில் சட்டவிரோதமாக நிதி சேகரிக்க வந்த...

2025-11-07 02:53:26
news-image

வடமாகாண சுதேசமருத்துவத் திணைக்கள அலுவலகம் மாங்குளத்தில்...

2025-11-07 02:51:14
news-image

இந்த ஆண்டு இதுவரை 2210 வீதி...

2025-11-07 02:35:23
news-image

யாழில் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது!

2025-11-07 01:58:41
news-image

யாழில் கூரிய ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருளுடன்...

2025-11-07 01:55:53
news-image

விசேட மூலோபாய உறவுக்கு முக்கியத்துவமளிப்பதே இலங்கையின்...

2025-11-06 15:10:08
news-image

இந்து சமுத்திரத்தின் அமைதியைப் பாதுகாப்பதற்கு இலங்கை...

2025-11-06 12:15:26
news-image

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்தியாவின்...

2025-11-06 22:17:21
news-image

கண்டி அருப்போலாவில் அமெரிக்கப் பெண் மரணம்...

2025-11-06 22:14:04
news-image

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவின் வகிபாகம்...

2025-11-06 15:40:08
news-image

2035க்குள் தொழுநோயை முழுமையாக ஒழிக்க அரசாங்கம்...

2025-11-06 21:16:38