போராட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது - முன்னிலை சோசலிசக் கட்சி

Published By: Digital Desk 4

25 Sep, 2022 | 10:04 PM
image

 (எம்.வை.எம்.சியாம்)

 போராட்டங்கள் மீது அடக்குமுறையை பிரயோகித்தமை மற்றும் அவர்களுக்கு எதிராக கடுமையான தாக்குதல் நடத்தியமை தொடர்பில் நாம்  வன்மையாக கண்டிக்கிறோம்.

மேலும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட பொலிஸார் இது தொடர்பில்   பொறுப்பு கூற வேண்டி ஏற்படும் என்று

 முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து சோசலிச இளைஞர் சங்கத்தினால் நேற்றுமுன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்ப்பு பேரணியை கலைப்பதற்கு பொலிஸாரினால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் 

மேற்கொள்ளப்பட்டது. மேலும் போராட்டகாரர்கள்  பொலிஸாரினால் கடுமையாக தாக்கப்பட்டு இருந்தார்கள். இதனை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

இப்போராட்டம் அரசியல் யாப்பிற்கு அமைய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளுக்கு அப்பால் சென்று சட்டவிரோதமான முறையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டமல்ல. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண மற்றும் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தேசபந்து தென்னகோன் ஆகிய இருவருமே 

 இப்போராட்டத்தை கலைப்பதற்கும் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கும் மூலகாரணமாக செய்யப்பட்டுள்ளார்கள்.

 மேலும் அவர்கள் உத்தரவுக்கு அமைவாகவே அரசியலமைப்பை மீறி போராட்டகாரர்கள் மீது கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சட்டத்தை மீறி அவர்கள் உத்தரவுக்கு அமைவாக  செயற்பட்ட பொலிஸாருக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கின்றோம்.

இதனுடன் தொடர்புடைய அனைவருக்கும் அடிப்படை மனித உரிமை மீறியமை தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுப்போம். மேலும் அவர்களுக்கு தனிப்பட்ட வகையில் பொறுப்பு கூற வேண்டி ஏற்படும். எதிர்வரும் 

காலங்களில் மக்களின் போராட்டங்களை அடக்குவதற்கு முயற்சிக்கும் போது ஒன்றுக்கு இரண்டு தடவைகள் சிந்திக்க வேண்டி ஏற்படும்.

அரசாங்கத்தினால் உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்த முயல்வது ஏன் எனில் நாட்டு மக்களால் முழு நாடும் போராட்டக்களமாக மாறிவிடும் எனும் அச்சத்திலாகும். அரசாங்கம் அச்சமடைந்தமை தொடர்பில் நாம் மிகவும் மகிழ்வடைகிறோம்.

நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுக்கிறோம்  அரசாங்கம் மற்றும் அரசாங்கத்தை வழிநடத்தும் தரப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த அச்சத்தை தொடர்ச்சியாக கொண்டு செல்ல முயற்சி செய்யுங்கள். நாம் ஆட்சியாளர்களிடம் மேலும் ஒன்றை கேட்டுக்கொள்கிறோம்.

இது போன்று வேடிக்கையான விடயங்களை கொண்டு சட்டங்களை பிறப்பிப்பது மற்றும் அமைதி வழிப்போராட்டங்கள் தொடர்பில்  அடக்குமுறைகளையும் மேற்கொள்வதை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லுங்கள் அப்போது தான்  அரசாங்கத்தின் பயத்தினை நாம் உணர்ந்து கொள்ள முடியும் என்றார்

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31