பொருளாதார நெருக்கடியினால் பிள்ளைகளை பராமரிக்க முடியாது என தெரிவித்து , சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் பிள்ளைகளை சேர்க்கும் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என வடமாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடமாகாணத்தில் பொருளாதார நெருக்கடி காரணமாக பிள்ளைகளை வைத்து பராமரிக்க முடியவில்லை என சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் , சிறுவர் இல்லங்களில் பிள்ளைகளை சேர்க்கும் பெற்றோரின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.
அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்திலையே அதிகளவான பிள்ளைகளை பெற்றோர் இவ்வாறு சிறுவர் இல்லங்களில் சேர்த்துள்ளனர்.
வடக்கில் 2021 ஆம் ஆண்டு 158 பிள்ளைகள் அவ்வாறு சேர்க்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு பொருளாதார நெருக்கடி கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தியமையால் இந்த ஆண்டின் அரையாண்டு கால பகுதிக்குள் 246 பிள்ளைகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு யாழ்.மாவட்டத்தில் 124 பேரும் , கிளிநொச்சி மாவட்டத்தில் 62 பேரும் , முல்லைத்தீவு மாவட்டத்தில் 45 பேரும் , மன்னார் மாவட்டத்தில் 07 பேரும் வவுனியா மாவட்டத்தில் 08 பேருமாக 246 பிள்ளைகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக எம்மால் பிள்ளைகளை பராமரிக்க முடியாதுள்ளது என பெற்றோரால் முன் வைக்கப்படும் கோரிக்கைகளை எமது திணைக்களம் பரிசீலித்து , பெற்றோரின் பொருளாதார நிலைமைகளை அறிந்து உண்மையில் அவர்களால் பிள்ளைகளை பராமரிக்க முடியாதா என்பதனை உறுதிப்படுத்திய பின்னர் வடமாகாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சிறுவர் இல்லங்களில் பிள்ளைகளை சேர்க்க அனுமதிப்போம் என வடமாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு திணைக்கள ஆணையாளர் இ.குருபரன் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM