(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)
இலங்கை மக்களுக்காக இரண்டாம் எலிசபெத் மகாராணி அளப்பரிய சேவை செய்துள்ளார் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்ற இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவு தொடர்பான அனுதாப பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிகையில்,
இலங்கை மக்களுக்காக இரண்டாம் எலிசபெத் மகாராணி அளப்பரிய சேவை செய்துள்ளார். பிரித்தானியா தனது தாயை இழந்துள்ளது.
அவரது இறுதிக்கிரியைக்கு இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதி கலந்துகொண்டமை முக்கியமான சிறப்பம்சமாகும்.
பொதுநலவாய மாநாடுகளின் தலைவராக பதவி வகித்தவர், இதன்போது மகத்தான பல பணிகளை மேற்கொண்டடிருந்தார். பொதுதுநலவாய அமைப்புகளுடன் இணைந்து நாமும் எமது அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அத்துடன் மகாராணியின் மறைவால் கவலைகொண்டிருக்கும் பிரித்தானிய மக்களுக்கு எமது அனுதாபத்தை தெரிவி்ப்பதுடன் அவரது புதல்வரான மூன்றாவது சார்ள்ஸ் மன்னருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். மறைந்த மகாராணியின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM