மே 9 வன்முறை நாடளாவிய ரீதியில் வியாபிக்க பாதுகாப்புத் தரப்பினரே காரணம் - இராஜாங்க அமைச்சர் டி.பி ஹேரத்

Published By: Vishnu

23 Sep, 2022 | 04:12 PM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)

மே 09 காலி முகத்திடல் களத்தில் இடம்பெற்ற தாக்குதல் பாதுகாப்பு தரப்பினரது பொறுப்பற்ற செயற்பாட்டினாலேயே   நாடு முழுவதும் வியாபித்தது.

பொறுப்புக் கூற வேண்டிய பாதுகாப்பு தரப்பினருக்கு எதிராக இதுவரை எந்நடவடிக்கையும் எடுக்காமலிருப்பது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என இராஜாங்க அமைச்சர் டி.பி ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்றில் இன்று (23) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரலவின் மறைவின் மீதான ஒத்திவைக்கப்பட்ட அனுதாப பிரேரணை மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், 

ஜனநாயகத்தின் மறு உருமாக கருதப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல படுகொலை செய்யப்பட்டமை ஜனநாயகத்துக்கு பேரிழப்பாகும்.

மே மாதம்09 ஆம் திகதி நாட்டில் ஜனநாயகம் முடக்கப்பட்டு பயங்கரவாதம் பலம் பெற்றது.குறுகிய நேரத்திற்குள் 74 பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டு அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் மீது மிலேட்சத்தனமான தாக்கதல்கள்  முன்னெடுக்கப்பட்டன.

மே மாதம் 09ஆம் திகதி பாதுகாப்பு தரப்பினர் தங்களின் கடமையை முறையாக செயற்படுத்தியிருந்தால் பாரதூரமான விளைவுகள் ஏற்பட்டிருக்காது,அமரகீர்த்தி அதுகோரலவையும் இழக்க நேரிட்டிருக்காது.நாட்டு மக்களின் உயிர் மற்றும் சொத்துக்களை பாதுகாக்கும் பொறுப்பு இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு உண்டு.

மே மாதம் 09ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்ற வன்முறை தாக்குதலின் பொது பாதுகாப்பு தரப்பினர் குறைந்தப்பட்ச அதிகாரத்தை பயன்படுத்தியிருந்தால் நாடு முழுவதும் வன்முறை வியாபித்திருக்காது.

எவரின் தேவைக்காக பாதுகாப்பு தரப்பினர் பொறுப்பற்ற வகையில் அமைதியாக இருந்தார்கள் என்பது கேள்விக்குறியது.

இச்சம்பவம் தொடர்பில் ஆராய முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் ரொஷான் குணதிலக ஆகியோர் தலைமையில் குழு நியமிக்கப்பட்டது.

பாதுகாப்பு தரப்பினர் தமது கடமைகளை நிறைவேற்றவில்லை என குழு அறிக்கை சமர்ப்பித்தது.இருப்பினும் பொறுப்புக் கூற வேண்டிய பாதுகாப்பு தரப்பினருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமலிருப்பது பாதுகாப்பு தரப்பினரது பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்தியுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37