கொவிட் -19 தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த எல்லைகளை வெளிநாட்டு பயணிகளுக்கு ஜப்பான் திறக்கவுள்ளது.
அதற்கமைய, சுற்றுலாப் பயணிகள் விசா இல்லாமல் நாட்டிற்குச் செல்ல முடியும். மேலும் அக்டோபர் 11 முதல் பயண நிறுவனம் மூலம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. நாளாந்த வருகைக்கான கட்டுப்பாடு நீக்கப்படும்.
நாட்டிற்கு வருபவர்கள் மூன்று முறை கொவிட் தடுப்பூசியை போட்டிருக்க வேண்டும், கொவிட்-19 பரிசோதணை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்கு இணையாக இருக்கும் வகையில் எல்லைக் கட்டுப்பாட்டுகளை ஜப்பான் தளர்த்தும் என பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்தார்.
ஜப்பான் ஜூன் முதல் பார்வையாளர்களுக்கு அனுமதித்தது. ஆனால் அவர்கள் சுற்றுப்பயணங்களின் ஒரு பகுதியாக இருக்க வேண்டியிருந்தது.
பயணங்கள், தீம் பார்க், விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் கச்சேரிகள் ஆகியவற்றிற்கு விசேட சலுகை வழங்கும். ஜப்பானிய குடியிருப்பாளர்கள் மற்றும் குடிமக்கள் 11,000 யென் (£69; $77) மானியத்திற்கு தகுதியுடையவர்கள் ஆகிய உள்நாட்டு பயண ஊக்குவிப்புத் திட்டத்தையும் கிஷிடா அறிவித்தார்.
உலகின் பணக்கார நாடுகளில் ஜபானில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளதோடு, தடுப்பூ போட்டு கொண்டவர்களின் விகிதம் மிக அதிகமாக உள்ளது.
கொவிட் தொற்று பரவல் ஏற்படுவதங்கு முன்பு 2019 ஆம் ஆண்டில் ஜப்பான் கிட்டத்தட்ட 32 மில்லியன் வெளிநாட்டினர் ஜப்பானுக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM