எச்சரிக்கை : கடும் மழையுடனான சீரற்ற கால நிலை தொடரும் .!

Published By: Robert

18 Nov, 2016 | 03:56 PM
image

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு நிலை காரணமாக கடும் மழை மற்றும் பனி மூட்டத்துடனான கால நிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தெற்கு, சப்ரகமுவ, மத்திய, மேல், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் கடும் இடியுடனான மழை பெய்வதற்கான அதிக சாத்தியம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் சில பிரதேசங்களில் 100 மி.மீ மேற்பட்ட மழைவீழ்ச்சி பதிவாக கூடும்.  அத்தோடு கிழக்கு மாகாணங்களில் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. கடற்சார்ந்த பகுதிகளிலும் நாடு பூராகவுமுள்ள சில பகுதிகளிலும் பலத்த காற்று வீசுவதற்கான சூழ்நிலை காணப்படுகின்றது. இதனால் தெற்கு, கிழக்கு, மற்றும் வடக்கு கடற்பிரதேசங்களிலுள்ள மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். குறித்த காலநிலை சில நாட்கள் தொடருவதற்கான சந்தர்ப்பங்களும் உள்ளன.

மேலும் தற்காலிகமாக நிலைக்கொண்டுள்ள காற்றலுத்தம் பலத்த காற்றாக மாறுவதற்கான சூழல் காணப்படுகின்றது. இதனால் கடும் மின்னலும் ஏற்படலாம் எனவே மக்கள் எச்சரிக்கையுடன் செயற்பட்டு பாதிப்புக்களை தவிர்த்துக் கொள்ளுமாறும் வளிமண்டலவியல் தினைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மழையுடனான காலநிலையால் அதிவேக வீதிகளில் பனிமூட்டம் சூழ்ந்து காணப்படுவதால் வாகன சாரதிகள் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். தெற்கு அதிவேக வீதியின் தொடாங்கொடையில் இருந்து, கெலனிகம வரையிலும், கஹதுடுவை மற்றும் கொட்டாவை மாற்றல்களிலும் அதிக பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்நிலையில் அதிவேக வீதிகளில் பயணிக்கும் போது மணிக்கு 60 கிலோமீற்றர் என்ற வேகத்தில் பயணிக்குமாறும், வாகனத்தின் முன் - பின் விளக்குகளை ஒளிரவிடுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மழை பாங்கான பகுதிகளில் வாழும் மக்கள் தொடர் மழை பெய்யும் பட்சத்தில் மண்சரிவு குறித்து எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறப்பு அதிரடிப்படையினரால் ரூ.35 மில்லியன் மதிப்புள்ள...

2025-06-20 19:29:53
news-image

மக்களின் வாழ்க்கைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்...

2025-06-20 18:44:35
news-image

முதலீடுகளை ஈர்ப்பதற்கு புதிய வழிமுறையில் கவனம்...

2025-06-20 18:31:53
news-image

புதைக்கப்பட்ட எம்மவர் உயிருக்கு நீதிவேண்டும்-செம்மணியில் போராட்டம்

2025-06-20 20:04:10
news-image

வடக்கிலுள்ள காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்:...

2025-06-20 18:25:28
news-image

கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்த சந்தேக...

2025-06-20 17:37:13
news-image

ஜனாதிபதி மாளிகையை பார்வையிட்டனர் தம்புத்தேகம மத்திய...

2025-06-20 17:47:41
news-image

முல்லைத்தீவு- உடையார்கட்டில் காலாவதியான பொருட்கள் விற்பனை...

2025-06-20 17:47:04
news-image

சட்டவிரோத தொழிலாளர்களின் அடாவடித்தனத்தை கண்டித்தல் தொர்பான...

2025-06-20 17:18:43
news-image

தேசபந்து தென்னக்கோன் சார்பில் 28 சாட்சியாளர்கள்...

2025-06-20 17:13:06
news-image

பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் போதைப்பொருளுடன்...

2025-06-20 16:36:42
news-image

சபாநாயகரை சந்தித்தார் தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர்

2025-06-20 17:09:00