தனுஷ் நடிப்பில் தயாராகும் புதிய படமான 'கேப்டன் மில்லர்' எனும் திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
'ராக்கி', 'சாணி காயிதம்' ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. இதில் தனுஷ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார்.
இவர்களுடன் சந்திப் கிஷன், நிவேதா சதீஷ், டேனியல் பாலாஜி, ஜான் கொக்கன், நாசர், விஜி சந்திரசேகர், குமரவேல், ஸ்யாம்சித்தா தாஸ், பிந்து, அருணோதயன், ஆண்டனி, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
மதன் கார்க்கி வசனம் எழுதும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, 'இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். பீரியட் எக்சன் என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகும் இந்த திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் என்னும் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் டி ஜி தியாகராஜன் தயாரிக்கிறார்.
1930 மற்றும் 40 ஆகிய காலகட்டத்தை கதைக்கள பின்னணியாகக் கொண்ட ஒரு வரலாற்று திரைப்படமாக 'கேப்டன் மில்லர்' தயாராகிறது. தனுசுக்கு தமிழ் திரையுலகை கடந்து இந்திய திரை உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு இருப்பதால், 'கேப்டன் மில்லர்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி, வெளியாகவிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM